பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏர் புதிதன்று, ஏறும் நுகத்தடி கண்டது, காடு புதிதன்று, கரையும் பிடித்ததுதான், கை புதிதா, கார் புதிதா? இல்லை! நாள் தான் புதிது, நட்சத்திரம் புதிது; ஊக்கம் புதிது, உரம் புதிது! மாட்டைத் தூண்டி, கொழுவை அழுத்து மண் புரளும், மழை பொழியும், o நிலம் சிலிர்க்கும் பிறகு, நாற்றும் நிமிரும், எல்லேத் தெய்வம் நிலம் காக்கும், கவலையில்லே! கிழக்கு வெளுக்குது! . பொழுதேறப் பொன் பரவும் ஏரடியில் நல்ல வேளையில் நாட்டுவோம் கொழுவை, பெண்மையை வியக்கும், பெண்ணை எண்ணி ஏங்கும், அகத் துறைக் கவிதைகளேயே கு. ப. ரா. அதிகம் எழுதிஞர். கருவளையும் கையும், பெண்ணின் பிறவி ரகசியம், விரகம்’ போன்ற பல இனிய கவிதைகள் ரசிகர்களுக்கு மகிழ்வூட்டும் படைப்புகள் ஆகும்.

கிராமியக் காதலர்கள் பற்றி, கிராமியப் பாங்கான முறை யில் கவிதை எழுதுவதிலும் கு. ப. ரா. உற்சாகம் காட்டினர். நல்ல வெற்றியும் கண்டார். அவரது அந்த ஆற்றலுக்கு ஒரு உதாரணம் ராக்கி நெனப்பு. (1939-மணிக்கொடி, ஏப்ரல்-15.)

குட்டி அவ என்ன சோக்கு

என்ன சோரு தெரியுமா? தீண்டாத சாதியவ

கலியன் சாம்பான் பொண்ணுடா! பட்டிக்குச்சு மோட்டு மேலே

பூத்த பறங்கி பேலே ஏண்டா அங்ணெ போயி பொறந்தா

கட்டுக் கொண்டெக்காரி? மட்டசாதி ஈனசாதி -

எண்ணு ஆர்ரா சொன்னவென்? அவனெக் கொண்டு அவமுன்னே

நிறுத்தி யல்ல பாக்கனும்: