பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 3

தருக நாணயம்." இதுதான் என் சுதந்திரப் பாடகன். எங்கேயோர் போருண்டு எங்கேயோர் பஞ்சமுண்டு என்று கேட்பினும் கவிதை தீட்டி . அதையும் காசாக்குவான் பொதுமக்கள் இதத்திற்காய்ப் பிறவி பெற்று வாழ்பவன். கண்ணியமே கொள்கையாக்கி மேலுடையின் கோடியில் ஜரிகை நகை இழைக்கின்ருன் அறத்தின் பிரசாரகன். தேசமிது அநித்யம்’

எனவே

இன்றெனக்கு தருவாய் நின் சுகத்தை' என்கின்ருன் அன்புப் பிரவாசகன். ஹேமத்த காமினி ஹேமந்த யாமினி சரத் சொப்பன காமினி நீ வாராய்.

என்று மிருத்யு பூஜை பண்ணுகிருர் கவி. நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு இனிமையாகவும் நயமாகவும் அமைத் துள்ளது.

மனிதனின் பலநிலைத் தூக்கங்களை எடுத்துக் கூறும் ‘தூக்கம் மற்றும் நெருப்புக் குச்சி, சில, ?. சரணுகதி என்ற கவிதைகளும் நீல. பத்மநாபன் படைப்புகள். ‘சரணுகதி சிறிது நீளமான கவிதை. வாழ்க்கையில் காணப்படும் கசப்பான உண்மைகளை கவிதைச் சுவை யோடு அவர் இதில் வர்ணித்திருக்கிருர், அவருடைய கவிதைகளுக்கு ஒரு உதாரணமாக ? என்பதை இங்கு தருகிறேன்.

பிறவிக்கு நன்றி?

பெற்றேருக்கு: