பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217

தலையைச் சொறி நாக்கைக் கடி. பல்லே இளி, முதுகை வளே, கையைக் கட்டு. காலச் சேர், என்ன இது? வயிற்றைக் கேள். சொல்லுமது.

புதுமையான தாலாட்டு ஒன்றையும் தந்திருக்கிருச் அவர். -

யாரும் அடிக்காமல் நீ ஏன் அழுகின்ருய்? நீ பிறக்காமலிருக்க நான் முயன்றேன் என்ற கறுப்பாலோ: காரணமில்லாமல் நீ ஏன் சிரிக்கின்ருய் என ஏமாற்றி நீ பிறந்துவிட்டாய் என்ற களிப்பாலோ:

இவருடைய கவிதைகள் பலவற்றில் நையாண்டித் தொனி கலந்து உயிரூட்டுகிறது. கண்ணே நீ, எதிர்ப்பு, படிகள் போன்றவை இத்தகையன. உதாரணத்துக்கு, மேற்கத்தியோரே கவிதை இங்கே தரப்படுகிறது.

ஒரு பக்கம் வாழ வழிவகுக்கும் சாகக் குழி பறிக்கும் உங்களைப் போலல்ல நாங்கள்.

நாங்களோ வாழவும் விரும்ப மாட்டோம் சாகவும் துணியமாட்டோம் இங்களே ப் போலல்ல நாங்கள். வாழாமல் வாழ்ந்து