பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#5

4-6-1939 இதழில் மயன் சிறு பதில் ஒன்று கொடுத் திருந்தார்.

Vers Libre என்ற பதம் சுதந்திரத்தை நோக்கி என்று அர்த்தப்படும்-மேல் நாடுகளில் சென்ற ஒரு நூற்ருண்டாகக் கலைகளின் தளைகளை அறுத்தெறியச் செய்யப்பட்டு வரும் முயற்சிகளுக்கு பொதுவாக இப்பெயர் வழங்கி வந்திருக்கிறது. கவிகளுக்கு சுதந்திரம் வேண்டியதுதான் என்று ஒப்புக் கொள்ளும் மகராஜ் ஓரளவுக்கு மேல் அந்த சுதந்திரம் இருக் கக்கூடாது என்று சொல்லுகிருர், கட்டுப்பாடில்லாதது என்று சொல்லப்படும் இந்தக் கவிதைக்கும் சில கட்டுப்பாடு கள் உண்டு ; அதை அனுசரித்து எழுதினுல் தான் அது கவிதையாகும் என்பதை மறந்து விட்டார் மகராஜ்.

என்னைப் பற்றிய வரையில் எல்லா இலக்கியத்துக்கும் பொதுவான பாஷை, அர்த்தம் என்ற இரண்டு கட்டுப்பாடு களே அதிகம் என்று சொல்லுவேன்.”

அதே இதழில், வசன கவிதை முயற்சியைக் கேலி செய் யும் வசன கவிதை' எனும் பரிகாசப் பாடல் ஒன்றும் வெளி வந்தது. அதை எழுதியவர் பெயர் வெறும் 'எஸ்' என்றே தரப்பட்டிருந்தது.

வசன கவிதை - - -

எதுகையும் மோனையும் வேண்டவே வேண்டாம். சீரும் கீரும் * ~ * சுத்தச் சனியன்கள் வெண்பாவும் கிண்பாவும் விருத்தமும் திருத்தமும் வேண்டாத தொல்லைகள். மட மட வென்றும், கட. கட வென்றும், மீள மள வென்றும் வசன கவிதை எழுதித் தள்ளுவோம் 'ததாஸ்து"