பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25;

முத்துக்கள், மீன்களின் கடலில்

雷岛 இறங்குவதில்லை, மழைக்கு மறை விடம் தேடுகிருேம். "எழுத்து காலத்தில் கவிதை எழுத ஆரம்பித்த எஸ். வைதீஸ்வரன் ‘கசடதபற'விலும் எழுதினர். வலே பின்னும் சிலந்தி வாழ்வு, நினத்த இடத்தில், கவலையற்று, நின்ற நிலையில் பெய்து விட்டு’, மறையும் வால்கள் ஆன மேகங்கள்.

பகல் பன்னிரண்டின் வெம்மையில்ை, வெட்கந் துறந்த கன்னிமாந் தோப்பு தன்னடியில் நிழல்சேல் அவிழ்த்து விட்டு, செங்கனிகள் தெரியக்காட்டி, காற்றுக்கு நிற்கும் சோக-நிருவாணக் காட்சி" (குளர்ச்சி) கொடி மேலேறி ஈர மனைவி ஜாகட்டில் தாவிக் குஷியாய், படபடக்கும் காக்கை எழுப்பும் பொருமை போன்ற விஷயங் களேக் கவிதைப் பொருள் ஆக்கியுள்ளார். பொய்விழி, பட்டம், நிலை என்ற கவிதைகள் நயமாக உள்ளன.

க. நா. சுப்ரமண்யம், நகுலன், தருமு அரூப் சிவராம், சச்சிதானந்தம், வே. மாலி கவிதைகளையும் 'கசடதபற’ பிரசுரித்துள்ளது. கோ. ராஜாராம் கங்கை கொண்டான் கவிதைகள் சிலவும் வெளிவந்துள்ளன. -

ராஜாராமின் சகுனம், பிளேக், சிந்தனையைத் துண்டும் கவிதைகள், - -

எதற்குக் கொடும்பாவி? எரிகின்ற உடலுக்கோ இளகாத மனதுக்கோ?