பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267

வாடகை சைக்கிள், டிராபிக் சிக்னல், மனம், மரம், நிழல்எதுதான் கவிதைக்குப் பொருள் ஆகிக் கற்பனையைத் தூண்டவில்லை?

நில்லாமல் நடக்கும் காதலியை நிறுத்தி வைக்கும்படி டிராபிக் சிக்னலுக்குத் தூது சொல்கிருர் ஒருவர். எல்லோ ருக்கும் இன்பம் தரும் வேசி ஆக அவர் வீட்டு ரேடியோவை மதிப்பிடுகிருர் இன்னுெருவர். துறவிக் கோலத்தில் திரியும் சம்சாரிகள்' ஆன நரிக்குறவர்களே. ‘விஞ்ஞானத்தின் அறைகூவல்கள்’ ஆகவும் சோஷலிசத்தின் புகலிடங்கள்’ ஆகவும் தரிசித்துக் கவிதை செய்கிருர் மற்ருெருவர்.

கர்த்தாவே! மத்தாயு-கள்ளும் குடிக்கும்: பெண்ணும் பிடிக்கும்: கர்த்தர் ரட்சிக்கனம். ரட்சிச்சில்லேங்கில், மத்தாயுக்கு மயிராணு இப்படிப் புத்தம் புதிய பிரார்த்தஐன தீட்டுகிறர் ஒருவர். புதுக் கவிதை எழுதுகிறவர்கள் இயற்கைக் காட்சிகளை யும், இயற்கை நிகழ்ச்சிகளேயும் வியந்து பாடத் தவறவில்லை. மழை, பனி, மின்னல் போன்ற விஷயங்கள் திரும்பத் திரும் பக் கவிதையாக்கப் படுகின்றன. இவ்வாறு பழைய பழைய விஷயங்களைக் கவிதையாக்குகிறபோது புதுப் புது உருவங் களே, உவமைகளே, நயங்களைக் கூற வேண்டும் என்றும் அவர்கள் முயற்சிப்பது புலனுகிறது,

உதாரணமாக, பனித்துளிகள் பற்றி இருளின் பிரிவுக் கண்ணிர்கள், இரவுக் கலவியின் புல்நுனிப் பிரசவங்கள், ககனவெளிப் பிறப்புக்கள், காற்றுநதி வியர்வைகள். ങ്ങു மாத வருகையின் தண்டோராக்காரர்கள் என்றெல்லாம் வியந்து எழுதுகிருர் ஒருவர். X

இன்னொருவர், இரவியின் வருகைக்கு இறைத்த முத்துக்கள். இரவியின் உமிழ்நீர், உறங்கும் அரும்பின் வியர்வை நீர், அரும்பு நாசிக்கு தேவன் அணிவித்த மூக்குத்தி, கான மகளுக்குப் போகும் நாள் விலக்கு. வான