பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

ஈயாய் கண்கள் பல மொய்க்க என்னே உணர்ந்தேன் தெருமலமாய்.

பின்னல் பாட்டு, வளர்பிறை ஆகியவை படித்து ரசிக்கப்பட வேண்டிய பாலகுமாரன் படைப்புகள்.

மனித இயல்புகளையும் இயற்கைக் காட்சிகளேயும் கவிதைகளாக இயற்றும் மாலன் படைப்புகளில் அநேகம் பாராட்டுதலுக்கு உரியவை. ருபங்கள் என்பது ஒன்று,

ஆனே வந்தது முதலில், அப்புறம் கலந்து போனது; குதிரை மீதில் ஒருவன் கொஞ்ச நேரம் போனுன். பாட்டன் புரண்டு மல்லாந்தான் பாஜன வெடிச்சு மரமாச்சு அலேயாய் சுருண்டது கொஞ்சம் மணலாய் இறைந்தது கொஞ்சம் கணத்தில் மாறிடும் மேகம் உண்மையில் எது உன்ரூபம்?

புதிதாகக் கவிதை எழுத ஆரம்பித்தவர்களில் தேவ கோட்டை வா. மூர்த்தியின் படைப்புகள் கவனத்தைக் கவரக்கூடியவை. *நிறக்குருடு சொல்லும் பொருளில் புதுமை கொண்டது. பொற்கிழி 'ஊமை மனம் சொல்லும் முறையில் புதுமை பெற்றவை.

'கணையாழி'யில் முஸ்தபா என்ற பெயரில் பிரசுரமான 'வாழ்க்கைப் பருவங்கள் கருத்து பொதிந்த நல்ல கவிதை.

"தலைமுடிகள், ஒன்றிரண்டு, பத்து நூருய் கருத்து உதிர்கிற இன்று இலேயுதிர் காலம். இதற்கு முன் மாரிக் காலம்.

எவரெவர் வாழ்விலோ பொன் மழை பெய்தது 每町守

பாலே வனத்தில் பொதி சுமக்கிறேன்.