பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

களும், நாகரிக மங்கையர் போக்கை பரிகசிக்கும் பூக்கள்’, ஆவேச மேடைப் பேச்சுக்களின் தன்மையைக் கிண்டல் செய்யும் வார்த்தை வளம்: ஆகியவையும், மன உணர்வு களே வெளிப்படுத்தும் தெருப்பாராக்காரருக்கு", கபிரமைகள்' ஆகியனவும் பசுவய்யாவின் தற்கால நோக்கையும் மனநிலை களையும் பிரதிபலிக்கும் படைப்புகள் ஆகும்.

கண்ணுடி முன் கடவுளையும் சேர்த்து ஒரு புகார்’ குறிப்பிடப்பட வேண்டிய ஒரு கவிதை.

என் மனம் என் முகம் நக்க கன்றின் குறியை தாய் நாக்குப் போல் நக்கி அடிமடி எக்களித்து சுகம் கான கிளுகிளுப்பு கால் இழுக்க எத்தன் தர்ம் உன்முன் நகர்த்தப் பட்டேன்?

இப்பொழுது அதற்கு அல்ல. உலர்ந்த என் முகம் வெளிப்படும் சலிப்பில் ஸ்புரித்தது இருக்குமே உனக்கு ஒரு முகம்’ எங்கே அது? என் பிம்பத்தின் பின்னிலா? நான் இன்றி உன்னேக் காண ஒரு ஆசை உன் முகம் காண விழையும் என் முகமே உன் முகம் மறைக்கும் விசித்திரக் கொடுமை. நீதான் பளிங்கு எனில் மரமும் கடலும் குருவிகளும் நகஷத்திரங்களும் வால் துடிக்கக் கத்தும் அணிலும், புணர்ச்சியும் கணக்கும் கருத்தும் தமுக்கின் ஓசையும் என் முன் என் முகம் கக்குவது ஏன்? என்று ஆடை உரித்து அம்மணம் பற்றும் என்

. பார்வை.

33. வானம்பாடி

്ഥങ്ങ് சமுதாயத்தின் துக்கங்கள் துயரங்கள் இங்கே பானுலும் எங்கேயானுலும், உறவும் சொந்தமும் கொண்