பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறு - வெண்ணெயானது நெய்யா யுருகிடுங் கண்ணி லாதவனேக் குருடெனனலாம் அண்ணளுனவன் தம்பிக்கு மூத்தவன் எண்ணி யாப்பி சைத்தாற் கவியாகுமே.

வேறு வாழ்க சீர்த8ள மோனே வாழ்க காரிகை யெதுகை ஆழ்க வசனக் கவிதை சூழ்க இலக்கண இருளே." வசன கவிதைக்கு எழுந்த எதிர்ப்புக்கு விவாத ரீதியான பதில் ஒன்று சூருவளி ஒன்பதாவது இதழில் (18-6-1639) இடம் பெற்றது. அதை எழுதியவர் 'கவிதைத் தொண்டன்’. பொதுவாகவே வசன கவிதையைக் கண்டிப்பவர்களு டைய வாதம் நூதனமாக இருக்கிறது-வசன கவிதை நூதனமோ இல்லையோ வசன கவிதை நன்ருக இருக்கிறதா இல்லையா என்று வாசித்துப் பார்த்து குணத்தை நிர்ணயிக்க அவர்கள் இஷ்டப்படவில்லை. சீர், தளை, எதுகை, மோனை களே அனுசரிக்காமல் எழுதிய கவிதை நன்ருக இருக்க முடி யாது என்பதே அவர்களுடைய கட்சி போல் இருக்கிறது. இல்லாவிட்டால் ஒரு புதுப் பரீகூைடி என்பதற்காகவே அதை ஏன் கண்டிக்க வேண்டும் ?

சில பண்டிதர்கள் வசன கவிதை புதிதொன்று மில்லை என்று சொல்லுகிருர்கள். பழைய நூல்களில் இருக்கிறதாம். எனவே வசன கவிதையை எதிர்ப்பவர்களே இரண்டு வகுப்பா கப் பிரிக்கலாம். (1) பழைய முறையைப் பின் பற்ருமல் நவீனமாகப் புரட்சிப்பாதையில் போகிறது என்ற கட்சி. (2) வசன கவிதை நவீனம் ஒன்றும் இல்லை. எல்லாம் பழையது தான். ஆகையால் அதைப் புதுப் பரீகூைடி என்று சொல் விக் கொண்டு கூத்தாடுவது பிசகு என்ற கட்சி,

முன் கட்சியினருக்கு ஒரு பதிலும் சொல்ல முடியாது. ஏனென்ருல் அவர்கள் குணத்தைப் பற்றியோ. கவிதையைப்