286
களையும் புதிர்களையும். புதிய பொருள்-புது விளக்கம் சொல் லும் சாமர்த்தியப் பிரயோகங்களையும் கவிதை என்று பெயர் பண்ண முயன்றிருப்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.
உதாரணம் :
தியாகிகள்
வேலியைப் பாதுகாக்க மடிகின்ற பயிர்கள்!
பண்டிதன்
'உன் வீடு தீ பிடித்து எரிகிறது’
என செய்தி வந்தால்
அதிலுள்ள
சந்திப் பிழையைப்
பார்த்துக் கொண்டிருக்கும்
ஆசான்.
பொங்கல்
தீயவன் தழுவியதால்
உள்ளம் கொதித்த
பானே
முக்காடு இட்டுக் கொள்கிறது.
எச்சில்
பணக்கையில்
சோரம் போன்
வாழை இல்ைப் பெண்
வெளி வந்த பின்னர்
பேசிக்கை” யில்
உடல் விரிக்கிருள்,
புது வாழ்வு அமைக்கும் எண்ண த்தோடும், சமுதாயப்
பார்வையோடும் கவிதை படைப்பதுடன் நின்று விடாது. வேறு பல நோக்குகளிலும் கவிதைகள் சிருஷ்டிப்பது குற்ற மல்ல என உணர்ந்தவர்கள் போல், இதர ரகங்களிலும் சிலர் கவிதைகள் எழுதியிருக்கிருள்கள். கங்கை கொண்டான்,