பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30&

புத்தகமாக்கப்பட்டது. செல்லப்பாவின் கவிதைகள் மாற்று இதயம் என்ற தொகுதியாக வெளி வந்தது. இவையும் "எழுத்து பிரசுரம் கள் தான்.

சிவகங்கை அன்னம் றட்புறவுக் கழகம் 1974ல் இரண்டு தொகுதிகள் பிரசுரித்தது. 'அபி’யின் மெளனத் தின் நாவுகள். அப்துல் ரகுமானின் பால்வீதி'தான் அவை, நஞ்சை மாவட்டம், தலைஞாயிறு என்ற ஊரில் உள்ள தலைஞாயிறு இலக்கிய அமைப்பு நாற்றங்கால் என்ற தொகுதியை தயாரித்து வெளியிட்டது. 32 கவிஞர்களின் 42 கவிதைகள். 'கசடதபற’ இலக்கிய நோக்குடைய கவிஞர்கள் பலரும் இதில் எழுதியிருக்கிருர்கள்.

ப. சுங்கை கொண்டான் எழுதிய பலரகமான புதுக் கவிதைகளும் கூட்டுப் புழுக்கள்’ என்று தொகுக்கப் பெற்றுள்ளன. பெரிய வடிவம் கொண்ட இப்புத்தகத்தில் கங்கைகொண்டான் தீட்டிய ஓவியங்களும் இனக்கப் பட்டுள்ளன.

பரிணுமன் தனது கவிதைகளே ஆகஸ்டும் அக்டோ பரும், என்ற புத்தகமாகத் தொகுத்திருக்கிருர், தொழிலாளித் தோழர்களுக்கு உணர்ச்சி ஊட்டும் நோக்கத்தோடு, சமுதாயப் பார்வையுடன், எழுதப்பட்ட முற்போக்குக் கவிதைகள் இவை. நவபாரதியின் நீண்ட முன்னுரையுடன் கூடிய து.

சக்திக்கனலின் கனகாம்பரமும் டிசம்பர்ப் பூக்களும்’ என்ற தொகுப்பு ஒன்று வெளிவந்தது. கவிஞர் சிற்பியின் கவிதைத் தொகுப்புகள் சிலவும் வந்துள்ளன. சி. மணியின் கவிதைகள் சில வரும் போகும் என்ற தொகுப்பாகப் பிரசுர மாயின. (க்ரியா வெளியீடு)

இவை தவிர, என் கவனத்துக்குக் கொண்டு வரப்படாத புதுக் கவிதைத் தெரகுப்புகள் வேறு சில வந்திருக்கவும் கூடும்.