பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. ஈழத்தில் புதுக் கவிதை

தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஈழத்து எழுத்தாளர்களும் அரும்பணி ஆற்றியுள்ளனர்; ஆற்றி வருகிருர்கள், எனவே ஈழத்து எழுத்தாளர்களின் சாதனைகளைக் கவனத்துக்குக் கொண்டு வராத எந்த இலக் கிய வரலாறும் பூரணத்துவம் பெற்றது ஆகாது என்பது என் கருத்து. புதுக் கவிதைத் துறையிலும் ஈழ நாட்டில் குறிப் பிடத்தகுந்த ஆக்க வேலைகள் கிராம ஊழியன் கலன் மோகினி காலம்தொட்டே நடந்து வந்துள்ளன. எழுத்து: காலத்தில் புதுக் கவிதை முயற்சி ஈழத்திலும் வேகம் பெற்று வளர்ந்தது. பின்னர், தமிழகத்தில் நிகழ்த்துன்னது போலவே, அங்கும் இத்துறையில் திருப்பங்கள் ஏற்பட் டுள்ளன. -

ஈழத்துப் புதுக்கவிதை முயற்சிகள், வளர்ச்சிகள் பத்தி விவரங்கள் கோரி நான் இலங்கை நண்பர்கள் சிலருக்கு எழுத நேரிட்டது. கலா நீதி க. கைலாசபதி இவ்வகையில் எனக்குப் பெரிதும் உதவியிருக்கிருச். அவருடைய முன் ளுள் மாணவர் செ. யோகராஜா, சிரத்தை எடுத்து, சில கட்டுரைகள் தயாரித்து அனுப்பி வைத்தார். இப்பகுதியில் காணப்படும் தகவல்களுக்கு அக்கட்டுரைகளே ஆதாரம். நண்பர் கைலாசபதி, யோகராஜா இருவருக்கும் என் நன்றி உரியது .

ஈழத்துக் கவிதை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முனைப் பான சில மாற்றங்களே ஏற்படுத்தியவர்கள் நாற்பதளவில் தோன்றிய மறுமலர்ச்சிக் குழுவினர் ஆவார். பழைய செய்யுள் மரபில் நவீன கவிதைக்குரிய இயல்புகளைப் புகுத்திச் சாதனை புரிந்த மறுமலர்ச்சிக் குழுவினரே ஈழத்தின் புதுக் கவிதை ஆரம்ப கர்த்தாக்களும்கூட. அவர்களுள் வரதர் (தி. ச. வரதராசன்), சோதி (சோ. தியாகராசா), விஜயன், தங்கம் குறிப்பிடத்தக்கவர்கள்.