பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309

ஆற்றலும் அனுபவமும் ஊக்கமும் பெற்ற படைப்பாளி இளைஞர்களது போக்கும் விபரீதமாகவே அமைந்து காணப் படுகிறது. தங்களுக்கு முந்தியதை அங்கீகரிக்க மனமில்லாத இவர்கள் அவற்றை அழித்துவிட (ஒழித்துக் கட்ட) ஆசைப் படுகிருர்கள்.

மரபுக் கவிதை படைப்பதில் சிறு வெற்றி கண்ட இளைய தலைமுறைக் கவிஞர்கள், 'பாரதி என்ன சாதித்து விட்டான்? அவன் எழுதினது கவிதையா? இவன் எழுதியது என்ன கவிதை?’ என்று பழித்துப் பேசியும், கிண்டல் செய்தும், தம்மைத் தாமே மெச்சியும் பேசுவது சகஜமாக இருக்கிற தமிழ் நாட்டில், புதுக் கவிதை எழுதிப்பெயர் பெற்றவர்களும் அதையே ஒரு மரபு ஆக்கி வருகிருர்கள்!

பிச்சமூர்த்தி எழுதியது புதுக் கவிதை இல்லை...சி. மணி எழுதியது கவிதையே இல்லை என்றெல்லாம் பேசி வந்தவர் கள் இப்போது காரசாரமாகத் தங்கள் எண்ணங்களைக் கட்டுரைகளாக்க முற்பட்டிருக்கிருர்கள். திறமை காட்டிப் படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சிலரை மட்டம் தட்டு வதிலும் உற்சாகம் பெறுகிருர்கள்.

இந்தப் போக்கு எதையும் எழுதலாம்-எப்படியும் எழுத லாம் என்ற நோக்குடைய கலப் படைப்பாளிகளிடம் மட்டும்தான் நிலவுகிறது என்றில்லை. சமுதாயப் பார்வை யோடு உழைப்போர் நலனுக்காகவும் உரிமைக்காகவும், புது யுகம் படைப்பதற்காகக் கவிதை எழுதுவோம் என்று கிளம் பிய முற்போக்காளர்களிடமும் இக் குறைபாடு பரவி யுள்ளது. t தங்கள் ஆற்றலே நிரூபிக்க முற்பட்டு, ஒரு இயக்க வேகத்தோடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டி ருந்த வானம்பாடிக் கவிஞர்'களுக்குள்ளும் பிளவு ஏற்பட்டு விட்டது -

1974 பிற்பகுதியில், சி. சு. செல்லப்பாவும் நானும் ‘எழுத்து பிரசுரம்’களை விற்பனை செய்வதற்காக, திருநெல் வேலி மாவட்டம் நெடுகிலுமுள்ள கல்லூரிகள் அனைத்துக்