பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரங்கள் ஒளிர்ந்திட, காற்றதன் கைகளைக் குலுக்கி வாதாடியும் பேய்போல் மழையைப் படுத்தி வைத்த பாட்டைக் கேட்டிரோ? நேற்று பார்த்தீரோ?

இதற்குப் பின்னர் ந. பி. வசன கவிதை பற்றி ஒரு கட்டுரை எழுதினர்:- - - -

“கவிதைக்கும் வசனத்திற்கும் உள்ள வித்தியாசம் உரு வத்தினலேயே ஏற்படுவதென்பது பலருடைய கருத்து. அக் கருத்து சரியல்ல என்பது எதிர்க்கட்சி. தத்துவ ரீதியாகப் பார்த்தால் மனிதனிடம் பல படிகள் இருக்கின்றன. ஊண்க உறக்கம், புணர்ச்சி இவை ஒரு படியைச் சார்ந்தவை. உடல் அவைகளுக்கு வேர். இவைகளைப் பெதுவதற்கான முயற்சி யில் ஈடுபடுவது உள்ளம். அது ஒரு படி.

இச் செய்கைகளுக் கெல்லாம் அப்பாற்பட்ட உலக ரகசியத்தை அறியத் துடித்து நிற்கும்.அறிவு வழி ஒன்றுண்டு. உணர்ச்சி வழியும் ஒன்றுண்டு. வசனத்தின் வழி அறிவுநிலை யைச் சார்ந்தது. கவிதையின் தர்க்க பாதை உணர்விலேயே ஒடும். அறிவின் வரம்பை மீறி வசனம் போகுமானுல் அந்த நிமிஷத்திலேயே அது கவிதையாகிவிட்டது என்று நிச்சயிக்க

5DÍT LÊ 9 -

"தீ இனிது’ என்று பாரதியார் சொல்லுகிருர். இனிது என்ற சொல் ருசியைச் சார்ந்தது. தீ சுடும்" என்ருல் வசனம். "தீ இனிது’ என்ருல் கவிதை. இது ஏன்? வார்த்தை வெறும் விஷயத்தை மட்டும் சொல்லாமல், உவமையைப் போல், உணர்வினிடம் பேசுமானுல் கவிதை பிறந்துவிடும், தீ சுடும் என்னும் பொழுது சுடும் என்ற பதம் தீயின் குணத்தை அறிவுக்குத் தெரியப்படுத்துகிறது. தீ இனிது என்று சொல் லும் பொழுது அறிவு அதை மறுக்கும்; தீயாவது இனிமை யாவது என்று கலவரப்படும். ஆனல் உணர்ச்சி ஏற்றுக் கொள்ளும். தீ இல்லையானுல் ஊண் ஏது? உலகு என்பது