பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

‘வசன கவிதையை ஏளனமாகப் பேசுவது இப்பொழுது இலக்கிய ரசிகர்களிடையே பாஷன்,

"அதென்ன வசன கவிதையா? இப்பொழுது யாப்பிலக் கணம் தெரியாதவர்களெல்லாம் இப்படி ஆரம்பித்து விட்டார் கள், வாய்க்கு வந்ததை எழுதி வசன கவிதை என்கிருர்கள்’ என்று ஒரு சிலர் கேலி.

‘வசன கவிதை புதிதொன்றுமில்லை. பண்டைத் தமிழில் இருந்ததுதான் அது. அகவல் வசன கவிதை தானே? இவர் கள் என்ன புதிதாகக் கண்டுபிடித்து விட்டார்கள்’ என்று மற்றும் சிலர் தாக்குதல்.

வேடிக்கை என்னவென்ருல் எதிர்ப்பவர்கள் இருதரப் பினர்களாக இருக்கிருர்கள். ஒருவர் ஆட்சேபனை மற்ருெரு வரது போல் அல்ல. ஒருவர் வசன கவிதையே கூடாது என் கிருச். மற்றவர். அது புதிது என்கிருர், விசித்திரம் தானே இது? -

யாப்பிலக்கணம் தெரியாததால் வசன கவிதையைப் பிடித்துக் கொண்டார்கள் அதை எழுதுகிறவர்கள் என்ற வாதம் சுத்த அசட்டுத்தனத்தைத் தவிர வேருென்றுமில்லை. எழுதுகிறவர்களுக்குத் தேவையானுல் யாப்பிலக்கணத்தைக் கற்றுக்கொள்ள எத்தனை நாழிகைகள் ஆகும்? அதென்ன அப்படி எளிதில் கற்றறிய முடியாத வித்தையா? தமிழ்ப் பண்டிதருக்கு வருவது கவிதை எழுத முனைகிறவனுக்கு வரா மல் போய்விடுமா என்ன? அப்படிப்பட்ட பிரம்மவித்தை ஒன்றுமில்லை அது நிச்சயம். யாப்பிலக்கணத்தைப் படிக்கா மல் கூட கண்களே மூடிக் கொண்டு செய்யுள் பாடலாம்.

அது கிடக்கட்டும். வால்ட் விட்மனும் எட்வர்டு கார் பெண்டரும் ஆங்கில யாப்பிலக்கணம் கற்றறியத் தெரியாமல் தான் கவிதை எழுதினர்களோ? புது யாப்பிலக்கணமே ஏற் படும்படி வங்காளியில் பாக்கள் பாடிய ரவீந்திரர், கடைசி காலத்தில் வங்காளியில் வசன காவியத்தில் எழுதித் தொலைத் தார். அதுதான் போகட்டும் என்ருல் சுப்பிரமணிய பாரதி, யாப்பிலக்கண முறையில் ஏராளமாக எழுதினவர் காட்சிகள்

புது-3