பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

நிழலில் சுவைத்துக் கொண்டிருக்கட்டும் என்று அவர்கள் எதிர்ப்பு அசட்டை செய்யப்பட்டு, வசன கவிதைக்குரிய ஆக்க வேலைகளும் நடந்து கொண்டிருப்பதை இன்று நாம் காண்கிருேம்.

இப்புதிய முயற்சியின் பயனுயெழுந்த, சுவை நிறைந்த சில வசன கவிதைகளை நாம் பார்த்திருக்கிருேம். ஆனல் பண்டிதர்களைப் பழிப்பதையே இலக்காகக் கொண்ட சில தண்டடி மிண்டர் செய்யும் சொற் பிரபஞ்ச அடுக்குகளே வசன கவிதை என்று ஒப்புக் கொள்வதற்கில்லே.

நடை சிறிது இறுக்கமாக இருப்பினும், வசன கவிதை வடிவமென்று சொல்லத்தகும் சில பகுதிகள்-வசன கவிதையைப் பற்றிய பேச்செழுவதற்கு-முன்னரும் இருந்தன என காட்டுவது இங்கு பொருத்தமாகும்.

1. ஆசையார்த் தலைக்கும் நெஞ்சத்து

அரசிளங் குமரன், துஞ்சிலன், பள்ளி கொள்ளாது துள்ளி யெழுந்து மெல்ல, நடந்து, கள்ள மறியா, உள்ள நெறியால் கவலே கதுவாத் தூய சேக்கையில் கண்வளரும் அறைவந் துற்ருன். 2. அச்சமும் விதுப்புந் தூண்டி,

அவலமுந் துணிவு மூட்ட அமலரும் வஞ்ச நெஞ்சன் அறைக்கத வகற்றப் புக்கான், 3. நள்ளிருளில், கண்வளரும் தன்னருகே தனிவந்துற்ற அவன் தறுகண்மை தனக்கஞ்சி மெய் விதிர்த்து மறுகலானுள். 4. புரைவீர்ப் பொய் நண்பன்,

தன்னிருள் நெஞ்ச நிறைகாம அழலுழல்வான் முறையற்ற துறை சொல்ல, குறையா நிறையுடையாள் முனிவுற்ருன், இத்தொடர், உரை நடையிற் செல்வதாயினும், கவிதைப் புண்பு நிறைந்ததாகவே காணப்படுகிறது. வசன