பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

கொள்கையை மறுத்து, அது முன்னரும்-வெவ்வேறு பெயர் வடிவில்-இலைமறை காய் போல-வழங்கியகெனக் காட்டுவதே

எமது நோக்கம்.”

(கலாமோகினி-33)

5. கு. ப. ரா. கவிதைகள்

புதுக் கவிதை வரலாற்றில் கு. ப. ராஜகோபாலனின் கவிதைகளுக்கு தனியான - முக்கியமான - ஒரு இடம் உண்டு, அவர் வசன கவிதைகள் தான் எழுதினர். அதிக மாகவும் எழுதி விடவில்லை. ‘மணிக்கொடி’ நாட்களில் 24 கவிதைகள்; கலாமோகினியில் 5 கவிதைகள். இவ்வளவே. நான் அறிந்தவரை-அச்சில் வந்தவை.

‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்; இமைப்பொழுதும் சேராதிருத்தல்’ என்று கொள்கை அறிவிப்பு செய்து கொண்டு, மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இருமுறையாகப் புது வடிவம் பெற்ற “கிராம ஊழியன் பத்திரிகையில், 1943 ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 1 முடிய, கெளரவ ஆசிரியர் என்றும், டிசம்பர் 15 முதல் 1944 ஏப்ரல் இறுதிவரை ஆசிரியர் ஆகவும் கு. ப. ரா. பணிபுரிந் திருக்கிருர், கவிஞர் திருலோக சீதாராம் அதன் ஆசிரியராக வும், நிர்வாக ஆசிரியராகவும் செயலாற்றினர். இந்த ஒன்பது மாதங்களில் கு. ப. ரா. கிராம ஊழியனின் கதை, கட்டுரை, வரலாறு என்று பல படைப்புகள் எழுதியிருப் பினும், ஒரு கவிதை கூட எழுதவில்லை. இது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு (அதிசயச்) செய்தியாகவே எனக்குப் படு கிறது.

ந. பிச்சமூர்த்தி கூட இரண்டே இரண்டு கவிதைகள் தான் எழுதியிருக்கிருர், கதைகள், மனநிழல் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். அவ்விரு கவிதைகளில் மிக அருமை யானது .