பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

வேண்டும்; அடுத்து அதை வெட்டியும் ஒட்டியும் அவர் எழுதுவது என்று திருலோக சீதாராம் யோசனை கூறிஞர். ஆயினும், அழகு பற்றி நான் எழுதிய வின்னர், அதைத் தொடர்ந்து, வெட்டியோ அல்லது ஒட்டியோ, எழுதுவதில் அவர் ஆர்வம் கொள்ளவில்லை. என்னேயே தொடர்ந்து எழுதும்படி சொல்லிவிட்டார்.

ஆகவே, பாரதி அடிச்சுவட்டில் நான் மட்டுமே முன்னேற நேர்ந்தது. இளவல்’ என்ற பெயரில், அழகு, திங்கள், அந்தி, வானம், மழை பற்றி எழுதினேன். அடுத்து, ஜகத்சித்திரம் மூன்று இதழ்களில் வந்தன.

அவை ரசிகர்களின் பாராட்டுக்களே மிகுதியும் பெற்றுத் தந்தன. அதே சமயம் குறை கூறல்களையும், கண்டனங் கண்யும் எழுப்பின. சாந்தி, ஒலி, காலம், கனவு மனம், இன்பம், சிந்தனை ஆகியன பற்றியும் காட்சிகள் முறை யில் வசன கவிதைகள் எழுதினேன்.

அவை பிரசுரமாகிக் கொண்டிருந்த சமயத்திலேயே வேறு பல ரகமான வசன கவிதைகளையும் நான் கிராம ஊழியனில் எழுதிவந்தேன். தமிழின்-தமிழ் இலக்கியத் தின் பாது காவலர்கள் தாங்களேதான் என்று சொல்லிக் கொண்டிருந்த பலரும் என்னையும், கிராம ஊழியன்: போக்கையும் ஏசுவதில் உற்சாகம் கண்டார்கள். இலக்கியத் துடனும், கவிதையோடும் தொடர்பே இல்லாத - என்ரு லும் தமிழை வளர்ப்பதே தங்கள் கட்சிதான் என்று பெருமை பேசிக்கொண்ட-அரசியல் கட்சியின் பிரசங்கி கள், மேடைகளிலும், அவர்கள் நடத்திய பத்திரிகைகளிலும் என்னைக் குறை கூறியும் தாக்கியும் மகிழ்ந்து போர்ைகள்நான் தமிழைக் கொலை செய்து கொண்டிருக்கிறேன் என்று குற்றம் சாட்டி,

பிச்சமூர்த்தி அடிக்கடி கவிதைகள் எழுதி உதவிஞர். திருலோக சீதாராமும், கு. ப. ராஜகோபாலனும் தயாரித்த கிராம ஊழியன் பொங்கல் மலரின் (ஜனவரி 1944) :பிக்ஷ"வின் மழை அரசு’ எனும் புதுமையான, அருமை