பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை


தனது இந்த நீண்ட நூலுக்கு மிகச் சுருக்கமானதாக நண்பர் வல்லிக்கண்ணன் எழுதி இருக்கும் ஆசிரிய முன்னுரையிலிருந்து பின்வரும் ஒரு பாராவை இங்கு எடுத்துக்காட்டி விட்டு என் அறிமுக வார்த்தைகளே தொடருகிறேன்.

'இது புதுக்கவிதை வரலாறுதான். புதுக்கவிதைகள், கவிஞர்கள் பற்றிய விமர்சனமோ ஆய்வுரையோ அல்ல. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வருஷரீதியில் தொகுத்து எழுதப்பட்டுள்ளன இதில். போகிறபோக்கில் அங்கங்கே சிற்சில இடங்களில் எனது அபிப்ராயங்களையும் மேலோட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

இதோடு, முன்னுரையின் முதல் பாரா இரண்டு வரிகளையும் கடைசி பாராவின் முதல் வாக்கியத்தையும் சேர்த்து பார்க்கும்போது ஆசிரியரின் வரையறுத்துக் கொண்ட உத்தேசம் நமக்கு தெளிவாகிறது. இந்த நூலில் நாம் எதிர்பார்க்க வேண்டியதையும் உணர்த்துவதாக இருக்கிறது.

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற இந்த புத்தகம் தமிழ் இலக்கியத் துறையில் ஒரு தலைசிறந்த முயற்சி. அதுமட்டுமில்லை. இது புதுவிதமானதும்கூட. சங்க காலக் கவிதைகள், காவ்யகால கவிதைக்ள், பக்தி காலக் கவிதைகள், சிற்றிலக்கிய கவிதைகள் ஆகியவற்றின் தோற்றமும் வளர்ச்சியும் என்று வரலாற்று ரீதியாக நமக்கு புத்தகங்கள் இருப்பதாக தெரியவில்லை. அதுக்கு நியாயமான காரணங்கள் கூட சொல்லலாம். அந்த இலக்கியங்கள் நமது சமீப காலத்தியவை இல்லை, வெகு புராதனமானவை. பராபரியாக கேள்விப்பட்டு தெரிய வந்த தகவல்களுக்கு மேலேயோ அல்லது அந்த இலக்கிய படைப்புகளுக்குள்ளிருந்து தெரிய வந்த தகவல்களுக்கு மேலேயோ வரலாற்று ரீதியாக இலக்கிய நடப்புக் குறிப்புகள் எதுவும் குறித்து வைக்கும் பிரக்ஞை இல்லாத நிலையில், நூற்றாண்டு என்ற அளவுக்குத்தான் எந்த இலக்கியப் படைப்புக்கும் இடம் காலம் நிர்ணயிக்க சாத்யமாகி இருக்கிற நிலையில், ஏதோ யூகத்தில் அல்லது சரித்திரத்