பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிஐலயாக்கி-உன்னைக் கடவுளாக்கினன் எனில்

காரணம்? - கல்யன்றி வேறன்று என்றறி! கலையை இகழ்வாரும் கலையை அறியாரும் . கல்லே! உன்னைப் பணிகிருர் என்னில்கார்னம்? கலேயன்றி வேறன்று என்றறி!

கலேயும் அழகும் மனமுவந்து கலவி கொண்டதால் - விளைவான தேவி!

அன்று சிரித்தாய், நாளே சிரிப்பாய், இன்றும் சிரிக்கின்ருய் எனில் . காரணம்? கலேயின்றி நீ இல்லை என்றறி!

தி. க. சிவசங்கரனும் ஊழியனில் புதுக் கவிதைகள் எழுதி வந்தார். அன்று அவர் வெறும் இலக்கியவாதி. கால் வேகத்தில், கம்யூனிஸ் தத்துவம் அவர் கருத்தைக் கவர்ந்தது. அதன் பாதிப்பு படிப்படியாக எழுத்துக்களில் படியலாயிற்று. சமூக நோக்குடன், எதார்த்த இலக்கியம்’ படைப்பதில் அவரது கவனம் திரும்பியது. வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப் பட்டோர், முதலாளி வர்க்கத்தினரால் சுரண்டப்படுவோர், வறுமையின் கோரப்பிடியில் சிக்கியோர் பற்றி எல்லாம் அவர் கவிதைகள் எழுத ஆசைப் பட்டார். அந்த எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அவரது வசன கவிதைகள் ஒன்றிரண்டு ஊழியனில் இடம் பெற்றன. என்ருலும், அந்நோக்கில் அன்று அவர் தீவிரமாக ஈடு பட்டிருக்கவில்லை. மின்னல், அழகுப் பெண் போன்ற விஷ யங்களும் அவருடைய ரசனைக்கும் எழுத்துக்கும் உரிய பொருள்களாகத் தான் இருந்தன. அக்காலத்திய அவரது கவிதைக்கு இதோ ஒரு உதாரணம்: .