பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

திறமை. காற்ருடி எனும் சிறு பொருளும் அவரது கவிதையில் உணர்ச்சியும் அழகும் பெறும் அற்புதச் சித்திரமாகி விடுகிறது.

மகுடி மேல் சீறிவரும் நாகம் போல் ஆடிற்றடி மின்னலேப்போல் வெகுண்டு முகிலிடையே எரிந்ததடி கத்தியைப் போல் சுருண்டு வெளியெங்கும் சுழன்றதடி. ராகுவைப் போல் எழுந்துஓடி சூரியனைத் தீண்டிற்றடி. குரங்கைப் போல் வாலடித்து கர்ணம் பல போட்டதடி, காலப் புருவைப் போல புள்ளியாய் மறைந்ததடி!

இயற்கையின் பல்வேறு கோலங்களையும், 88லகஅளயும் அவர் கண்டு ரசித்திருப்பதை அவரது கவிதைகள் அனைத் திலும் காணலாம். மழையின் கூத்தை கம்பீரமான வர்ணிப்பாக ந. பி. சித்திரிப்பதை, முன்பே இத்தொடரில் நான் எடுத்தெழுதிய கவிதை விளக்கியிருக்கும். பூக்காரி கவிதையிலும் மழை நேரம் வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆளுல் ஒரு சோக சித்திரமாக.

அம் மழைநேரக் காட்சி மாபெரும் வாழ்க்கை உண்மை ஒன்றை சுட்டுவதற்காகவே காட்டப்படுகிறது.

வாழ்க்கை பலாத்கார மயம் ஆகிவிட்டது. போட்டி, பொருமை, சண்டை சாவுதான் எங்கும் நடம் புரிகின்றன. அவற்றிடையே அன்பு அகிம்சை என்கிற போதனை எடுபடு வதில்லை. வாழ்க்கைச் சந்தையிலே இத்தெய்வக் குரல் விலை போவதில்லை. மழை நேரத்தில் ஜாதி மல்லிகையைக் கூவி விற்பனை செய்ய முயலும் பூக்காரியின் பொங்கும் குரல் மதிப் பிழைந்து போவது போல் தான் இதுவும்.

சாரலின் கடுஞ் சினத்தில் பூ மோகம் ஆடவில்லை,