பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

பிலே பட்டிடுவாள் என்று கேள்விப்பட்டு, மாரி வேடர்களைப் போய்க் கெஞ்சினுள். வேடர்களோ

யானைவாய்க் கரும்பை நீங்கள் மீட்டும் ஆடப் பார்க்கிறீர். எரிந்துபோன இறகு சூடி எழிலிலேறப் பார்க்கிறீர். பாம்புரிக்கும் வெண்சட்டை செடிகளிலே ஆடும். பொன்னுடலப் புதுப்பாம்பு பூமியிலே மின்னும் . பாம்பை விட்டுச் சட்டைக்காக அழுவதுண்டோ சொல்லு! அமுதமான மழை அரசி அண்டத்திலே முளைப்பாள். அல்லி மலர்க் கால்சிலம்பு அகிலமெங்கும் இசைக்கும் என்று கூறிவிட்டனர்.

இதைக் கேட்டு கடல் அலைகள் சீற்றம் கொண்டன. காவியத்தின் முடிவாக வரும் இப்பகுதி படித்து ரசித்து இன் புற வேண்டிய அருமையான கவிதைப் படைப்பு ஆகும்.

சினம் மிகுந்த கடல் திரைகள் வானளாவச் சீறின. கருமை மிகுந்த விஷத்துடனே வானப் போய் பிடுங்கின. காற்று ஒன்று கூவிக்கொண்டு உலகை வளையம் வந்தது. கடற்கரை மணல்களெல்லாம் சுழன்று சவுக்கை எடுத்தன. செம்படவக் கொண்ட்ல் வந் வானில் வலைகள் வீசிற்று. உலகை ஏற்றும் ஒளிகளெல்லாம் மீன்க8ளப் போல் சிக்கின. மண்ணும் விண்ணும் ஒன்றதாக மழையின் தூதர் வந்தனர். கருப்புக் கொண்டல் வானே வளைத்து வெளியைத் தழுவிக் கொஞ்சவுே