புதுப்புது சிந்தனைகள்
147
உடலைக் காக்க ஒரு நாளைக்கு
உண்ணாமல் முயற்சிப்பது விரதம்
ஒரு மாதத்திற்கு முயற்சிப்பது நோன்பு
வாழும் காலம் வரை முயற்சிப்பது ஒழுக்கம்
வாழ்வில் ஒழுக்கம் காப்பவன்
எல்லோருடைய நெஞ்சிலும் வாழ்கிறான்.
ஒழுக்கம் இல்லாதவன் இருக்கும் பொழுதே
நோகிறான் - வேகிறான் - சாகிறான்.
வாழ்வதா - தாழ்வதா? எல்லாம்
அவனவன் கையில் தான் இருக்கிறது
(கை = ஒழுக்கம்)
தனக்காக தன்னை இழப்பவன் தீயன்
தனக்காகப் பிறரை அழிப்பவன் பேயன்
தனக்காகவும் பிறருக்காகவும் தன்னை தருபவன்ஆயன்!
இப்பொழுதெல்லாம் ஆயர்களைப் பார்க்க முடிவதில்லை
பேயர்கள் தான் பெரிதாகக் காட்சியளிக்கின்றனர்.
உடுக்கும் துணிகளில் உயர்வானதாகப் பார்த்து
அணிவதை உடை என்றனர் (உடு +ஐ)
உடுக்கும் துணி கௌரவத்தைக் காக்கவும்.
ஒழுக்கத்தை உயர்த்தவும், மானத்தை மீட்கவும்
உதவுவதை உடுக்கை என்றனர் (உடு + கை)