பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எது சமூக சேவை.

ராஜபக்தியும், சமூக சேவையும் ஒத்து வராத இந்தக் காலத்தில், மரியாதையாகச் சமூக சேவை என்று சொல்லப்படும் தமது பெஞ்சு மாஜிஸ்திரேட் பதவில் கொஞ்சம் பெருமையுண்டு.

ஊரை ஏமாற்றுகிறவர்கள்

“சிக்கிரிப் பவுடர் காப்பி மாதிரிதான் இருக்கும்; ஆனால் காப்பி அல்ல; சில பேர் தெய்வத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றி வருகிற மாதிரி” (என்றார் கந்தசாமிப் பிள்ளை.)

ஆளா! வியாதியா!

உங்களுக்கு, நான் வைத்தியத்தை ஜீவனோபாயமாக வைத்திருக்கிறேன் என்பது ஞாபகம் இருக்க வேண்டும். வியாதியும் கூடுமான வரையில் அகன்று விடக் கூடாது, ஆசாமியும் தீர்ந்து விடக் கூடாது. அப்பொழுதுதான், சிகிச்சைக்கு வந்தவனிடம் வியாதியை ஒரு விபாபாரமாக வைத்து நடத்த முடியும். ஆள் அல்லது வியாதி என்று முரட்டுத் தனமாகச் சிகிச்சை பண்ணினால், தொழில் நடக்காது. வியாதியும் வேகம் குறைந்து படிப்படியாகக் குணமாக வேண்டும்; மருந்தும் வியாதிக்கோ மனுஷனுக்கோ கெடுதல் தந்து விடக் கூடாது. இதுதான் வியாபார முறை (கந்தசாமிப் பிள்ளை கூறுகிறார்.)

32