பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தெரிந்த தொழிலால் பிழைக்க முடியாது

இரண்டு பேரும் மெளனமாக இருந்தார்கள். “தெரிந்த தொழிலைக் கொண்டு லோகத்தில் பிழைக்க முடியாது போல இருக்கே” என்றார் கடவுள்.

எதிரியின் மீது பாயலாமா?

தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதிரியின் மீது பாய்வது உயிர்ப் பிராணிகளின் இயற்கைக் குணம் [சுப்பனும் ஒரு ஜீவன் தானே!]

யார் நல்லவன்

வெள்ளிக்கிழமை மத்தியானம் வெயிலின் ஆதிக்கம் ஹிட்லரை நல்லவனாக்கியது.

வடிகட்டின அசடர்கள் யார்?

வாழ்க்கைக்கு அவசியமான உலக அநுபவம் உண்டு; ‘படித்தவர்’களைப் போல் அவர்கள் வடிகட்டின அசடர்கள் அல்ல.

அழகாகப் பிறக்கக் கூடாதா?

ஏழையாகப் பிறந்தால் அழகாகப் பிறக்கக் கூடாது என்று விதியிருக்கிறதா?

33