பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வசிகரிப்பது எப்படி?

கல்யாணியின் அழகு, ஆளை மயக்கியடிக்கும் மோகலாகிரியில் பிறந்த காம சொரூபம் அன்று. நினைவுகள் ஓடி மறையும் கண்கள். சோகம் கலந்த பார்வை. அவளது புன்னகை ஆளை மயக்கா விட்டாலும் ஆளை வசிகரிக்கும் அப்படி வசீகரிக்ப் படாதவன் மண் சிலை தான்.

அவளும் ஒரு பெண்தானே!

கல்யாணியும் ஒரு பெண்ணாயிற்டிே, அவளுக்கும் இயற்கையின் தேவையும் தூண்டுதலும் இருக்குமே என்ற ஞானம் சிறிதும் கிடையாது போயிற்று (சுப்புவையருக்கு.)

யாரால் கட்டப்பட்டது!

சுப்புவையரின் வீடு, ஜன்னல்களுக்குப் பெயர் போனதன்று. காற்றும் ஒளியும் உள்ளே எட்டிப் பார்க்கக் கூடாது என்று சங்கற்பம் செய்து கொண்ட சுப்புவையாரின் மூதாதைகளில் ஒருவரால் கட்டப்பட்டது.

வாழ்க்கையை எங்கு கழிக்கலாம்!

மனிதப் புழுக்களே இல்லாத, மனிதக் கட்டுப் பாடற்ற, மனித நாகரிகம் என்ற துர்நாற்றம் வீசாத கானகத்தில், வாழ்க்கையையே ஓர் இன்பப் பெருங்கனவாகக் கழித்தால் என்ன?

34