பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தண்ணீரில் பால் கலப்பது

நீரோ மாமிச பட்சணி, நானோ சாத்வீக உணவுக்காரன், எண்ணெய்க்கும் தண்ணீருக்கும் சரிபட்டு வருமா? உறவு என்றால் தண்ணீரில் பால் கலப்பது மாதிரி இருக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு.

காககையின் ஓலம்

விழுந்த காக்கையைச் சுற்றி ஓலமிடும் காக்கை மாதிரிதான் செண்பகராமன் பிள்ளை கத்தினார்.

கற்பைப் புகுத்தலாமா?

கற்பு நிலை என்னவென்பது எனக்கு நன்கு தெரியும். பிறர் புகுத்திக் கற்பு நிலை ஓங்குவது அனுபவ சாத்தியமான காரியமன்று.

நெருப்பில் எண்ணெய்

(கடிதத்தைப் பார்த்ததும் பூர்ணங்கலித்தின் துக்கம்) நெருப்பில் எண்ணெயிட்டது போலாயிற்று.

உரிமை இல்லையா?

சுதந்திரத்துக்கும் காதலுக்கும் ஹிந்து சமூகத்தில் உரிமை இல்லை என்கிறார்கள். பார்த்துக் கொள்வோம்.

39