பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மனிதனின் ஆசை எது?

மனிதனுக்குப் பிணத்தைப் பார்க்கும் ஆசை, எல்லா ஆசைகளையும் விடப் பெரிது. பயத்தில் பிறந்த ஆசையோ என்னவோ?

கலியாணம் என்றால் என்ன?

கலியாணம் என்ற பதத்திற்கு அகராதியில் ஒரு அர்த்தம் இருக்கலாம். கவிஞனது வியாக்யானம் ஒன்று இருக்கலாம். அதெல்லாம் எனக்குத் தெரியாது. நடைமுறை உலகத்திலே இந்த மகத்தான கலியுகத்திலே, திருமணம் என்றால் குலப் பெருமை கிளத்தும் கலகாரம்பம் என்று பெயர்.

மனிதர்கள் ஆக்குவது எப்படி?

கோழைத்தனம் பிறப்புரிமையாக இருக்கிற இந்தப் புழுக்களை மனிதர்கள் ஆக்குவது எப்படி?

அர்த்தமற்ற வார்த்தை எது?

மரண தண்டனை அனுபவிக்கும் ஒருவன் சார்லி சாப்ளின் சினிமாவை அனுபவிக்க முடியுமா? வைதவ்ய விலங்குகளைப் பூட்டிவிட்டுச் சுவாரஸ்யமான பிரசங்கத்தைக் கேள் என்றால் அர்த்தமற்ற வார்த்தையல்லவா அது. (‘வைதவ்ய விலங்கு’ என்பது சமூகத்தின் கொடுமையான கட்டுப்பாடுமூடக்கொள்கை.)

40