பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வழி எது?

தொல்லை தீர வழி இருக்கும் பொழுது, தர்ம சாஸ்திரமா குறுக்கே நிற்க முடியும்?

யாரிடத்தில் செல்லும்?

பிரசங்கங்கள் படித்தவர்களிடத்தில் செல்லும்; இந்த வாயில்லா பூச்சிகளிடத்தில்?

இயற்கையின் பூரண கிருபை

ஒரு தடவை ஆதனூருக்கு வந்திருந்தான். அப்பொழுது கருப்பனின் மகளுக்கு வயது வந்து விட்டது. நல்ல இயற்கையின் பூரண கிருபை இருந்தது.

கிராமத்தின் அழகு

சாட்சி சொன்ன கோமுட்டிச் செட்டி கண்ட குதிரையைப் போல், பட்டணத்தின் தொந்தரவுகளுடன் கிராமத்தின் அழகையும் பெற்றிருந்தது.

சட்டம் இருக்கிறதா?

ராமனுடைய பெயரை வைத்துக் கொண்டால் ராமன்போல் வீரனாக இருக்க வேண்டும் என்று எங்காவது சட்டம் இருக்கிறதா?

41