பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்ல பொருள் எது?

மனிதனுக்கு ......... தனக்குக் கிடைப்பது நல்ல பொருளாக இருக்க வேண்டும், என்ற ஆசையினால்தான் இருக்கின்றான்.

கணவரின் நண்பர்

யார்தான் சாதரண காலத்தில் கூடத் தம்முடைய கணவரின் நண்பருக்காகக் கழுத்து நகையைக் கழற்றி கொடுக்கச் சம்மதிப்பார்கள்?

கங்கையின் வெள்ளம்

'கள்ளிப் பட்டியனால் என்ன? நாகரிக விலாசமிட்டுத் தொங்கும் கைலாசபுரம் ஆனால் என்ன? கங்கையின் வெள்ளம் போல, காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கிறது... ஓடிக் கொண்டேயிருக்கும்,

வளைவு என்றால் என்ன?

திருநெல்வேலிப் பக்கத்தில் வளைவு என்பது பத்துப் பதினைந்து வீடுகள் சூழ்ந்த ஒரு வானவெளி, இப்படிப் பல வளைவுகள் சேர்ந்தது தான் ஒரு தெரு, அல்லது ஒரு சந்து. மாவடியா பிள்ளை வளைவு என்றால் அழுக்கு, இடிந்த வீடு, குசேல. வம்சம் என்பவற்றின் உவமானம்.

பருப்பில்லாமல் கலியாணமா?

தமிழ்நாட்டில் மேற்கோள் இல்லாத ஆராய்ச்சிப் புஸ்தகமும் பருப்பில்லாத கலியாணமும் உண்டா?

44