பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கவிதையை ரசிப்பது எப்படி?

உடற்கூறு நூல் படியாவிட்டால் உயிர் வாழ முடியாதென்று சொல்ல முடியாது. அதைப் போல் இலக்கணம் இல்லாவிட்டால், கவிதை இருக்க முடியாதென்று கூற முடியாது. ஆனால் கவிதையை ரஸிப்பதற்குக் கவிதை என்றால் என்ன வென்று தெரிந்திருக்க வேண்டும்.

பண்டிதர்களின் இலக்கியம்

தற்காலத்தில் பண்டிதர்கள் இலக்கியம் எது என்று கவனிக்க முடியாமல் எல்லாவற்றையும் புகழ்ந்து கொண்டு இடர்ப்படுவதற்குக் காரணம் அவர்கள் இலக்கியம் என்றால் என்னவென்று அறியாததுதான்.

இலக்கியம் எது?

வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம், வாழ்க்கையைக் சொல்வது, அதன் ரசனையைச் சொல்வது இலக்கியம்.

இலக்கியம் குப்பையா?

இலக்கியத்திற்கு ஜீவநாடி அமைப்பு. அதை இழந்தால் இலக்கியம் வெறும் குப்பை.

வாழ்க்கையின் சாளரம்

சிறுகதை, வாழ்க்கையின் சாளரங்கள். வாழ்க்கையின் ஒரு பகுதியை அல்லது ஒருவரின் தனி உணர்ச்சியை அல்லது ஒரு குண சம்பவத்தை எடுத்துச் சித்திரிப்பது.

48