பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உணர்ச்சிக் கண்கள்

கவிஞன் உலகத்தின் உண்மைகளை, வாழ்க்கையின் ரகஸியங்களை வேறு விதமாகப் பார்க்கிறான். அவன் கண்கள் உணர்ச்சிக் கண்கள். கனவுக் கண்கள்.

சரியான வார்த்தை எது?

கவிதையில், சரியான வார்த்தைகள், சரியான இடத்தில் அடைய வேண்டும். கவிஞன் வார்த்தைகளை எடுத்து கோர்ப்பதில்லை. உணர்ச்சியின் பெருக்கு, சரியான வார்த்தைகளைச் சரியான இடத்தில் கொண்டு கொட்டுகிறது.

கவிராயன் யார்?

கத்தி விழுங்குபவனும் கவிராயனும் ஒன்றல்ல. கவிராயன் நாம் செய்யக் கூடிய காரியத்தைத்தான், நாம் எப்படிச் செய்ய விரும்புகிறோமோ அந்த அளவு ஆணித்தரமான அழுத்தத்துடன் செய்கிறான் என்பவை தவிர நாம் செய்ய முடியாத காரியத்தை அவன் செய்கிறான் என்பதல்ல.

நடைவண்டி

நமது இலக்கியமானது நெடு நாள் பட்ட வளர்ச்சி கண்டது. அதன் வார்த்தை அமைதிகளே கவிதைப் பண்பு கொண்டு, நடைபயிலும் சிறு குழந்தைக்கு நடைவண்டி போல அமைந்து கிடப்பதால், பேரிகை கொட்டி பிழைப்பதைவிட, கவிதை கட்டிப் பிழைப்பது இலகுவான காரியமாகி விட்டது.

50