பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கவர்ச்சி காணலாமா?

இயல்புக்கு விரோதமான எந்தச் செயலிலும் கவர்ச்சி காண முடிவது துர்லாபம்.

இரண்டு இருதயங்கள்

ஒரே விதமாகத் துடிக்கும் இரண்டு இருதயங்கள் பிணிக்கப்படுவதில் அதிசயமில்லை.

அன்பில் வசப்படலாமா?

குயிலுக்கு அவன் அடிமை. அன்பில் வசப்படாமல் யார்தான் இருக்க முடியும்? ஆதிலும் ஒரு கவிஞன்...

பகற் கனவுகள்

மோகனமான பகற் கனவுகள் காண்பதில் கவிஞனுக்கு இணையாகக் காதலர்களைத்தான் ஒருவாறு கூறலாம்.

கை தட்டலாமா?

இரண்டு கைதட்டினால் தானே சப்தம் இரண்டு மனம் போராடினால் தானே இறுதி.

இலட்சிய உலகில் வசிப்பவனா?

கவிஞன் எப்பொழுதும் ஒரு இலட்சிய உலகில் வசிப்பவன். அவனது உள் மனத்தின் உணர்ச்சி ஊற்றுக்களிலிருந்து ஜீவசக்தி பெற்று வரும் வார்த்தைகள் தாம் கவிதைகள்.

51