பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“சும்மா சொல்லும்; இப்போவெல்லாம் நாம் சுத்த சைவன், மண்பானைச் சமையல் தான் பிடிக்கும். பால், தயிர் கூடச் சேர்த்துக் கொள்வதில்லை” என்று சிரித்தார் கடவுள்.

சிரங்கு உபாதை

மெலிந்த தேகி; இடுப்பைச் சுற்றிலும் முதுகு வரையிலும் வண்ணான் சொறி, இவருடைய அன்புக்குக் கிருஷ்ண பக்தியும் சிரங்கு உபாதையும் போட்டியிடுகின்றன.

வாழ்க்கை எதனால் நடக்கிறது?

ஆசை! அதற்கும் மனிதன் சொல்லிக் கொள்ளும் லட்சியம் என்பதற்கும் வெட்கமே கிடையாது. இலட்சியத்தால் நடக்கிறதாம், நீதியால் நடக்கிறதாம்; தர்மத்தால், காதலால் வாழ்க்கை நடக்கிறதாம்! உண்மையில் இதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா? வாழ்க்கையில் ஒன்று. தான் நிஜமானது. அர்த்தமுள்ளது. அது தான் மரணம்.

நான் அவளையே பார்த்துக் கொண்டு பின்புறம் கை நீட்டும் பொழுது சிலசயம் என் கை அவள் கை வளையலில் படும்? அல்லது. ஸ்தன்யங்களில் பட்டுவிடும்.

57