பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அயோக்கியர்களின் நடமாட்டம்

அயோக்கியர்கள் நடமாடுகிறார்கள்: தெய்வ சன்னிதானத்திலும் நடமாடுகிறார்கள். அங்கே வியாபாரத்தனமாக மனசை அடமானம் வைக்கிறார்கள்.

அரிச்சந்திரனின் தடி

அரிச்சந்திரன் மயான காண்டத்தில் ஊன்றிக் கொண்டு நிற்கவேண்டிய தடி சடக்கென்று ஒடிந்து விட்டால் எப்படியிருக்கும்? ‘பின்-அரிச்சந்திரன்’ அந்த சமயத்தில் சோகமே குலைய மிருதங்ககாரனைப் பார்த்து உறுமுவது போலிருந்தது என் நண்பரின் பார்வை.

கால்களை நம்பலாமா?

ஜனங்கள் பார்த்தசாரதியை நம்பினார்கள். பக்கத்து வட்டாரக் கடவுள்களை நம்பினார்கள். கடைசியில் இப்பொழுது தங்கள் கால்களையே நம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

மனம் நொந்து கொள்ளலாமா?

வாதவூரே, அப்படி மனம் நொந்து கொள்ளக் கூடாது. தாங்கள் பழையபடி எனக்கு அமைச்சராகவே இருக்க வேண்டும். தாங்கள் இல்லாவிட்டால் இத்தனை குதிரைகள் கிடைக்குமா?

58