பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • தென்திசைக்கே சென்றுவிட்டார்!'

35 புதுமைப்பித்தன் தமது அந்திம காலத்தில் திருச் சிக்குச் செல்லவில்லை. அதற்கும் தெற்கேயுள்ள திருவனந்த புரத்துக்குத்தான் சென்றார், ஆனால் தமிழ் நாட்டின் சாபத்தீடு அவரை அதற்கும் தெற்கே-சென்றவர்கள் மீளாத தென் திசைக்கே-வழியனுப்பி வைத்து விட்டது. தமிழ் நாட்டுச் சிறு கதை உலகின் தனிக்காட்டு ராஜா வாக விளங்கிய புதுமைப்பித்தன் 1948-ம் வருஷம் ஜூன் மாதம் 30-ம் தேதியன்று. அர்த்த சாமத்தில் நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார்.