பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்)194 இயல்பினே உடையவர்: ஒரு சமயம் நாங்கள் கடற்கரையில் விளையாடிக் கொண் டிருந்த போது, ஒருவன் சுண்டல் விற்றுக் கொண்டு வந்தான். அப்போது நாங்கள் சுண்டலைப் பற்றிப் பாட வேண்டும் என்று விளையாட்டாகக் கேட்டோம். உடனே கவிஞர் மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு காகிதத்தை எடுத்தார். ‘சுண்டல் என்று ஏன் பெயர் வந்தது தெரி யுமா?’ என்று ஒரு விைைவ எழுப்பி விட்டுக் கவிதை புனையத் தொடங்கி விட்டார். இதோ அக் கவிதை: 'சூட்ட டுப்பில் ஒருபா னைக்குள் வார்த்த நீரில் ஒருபடி கடலே போட்டெரித்துப் பொங்கிய நீரும் சுண்ட இறக்கித் தாளித் திடுவதால் சுண்டல் என்பார் அதன் பெயர் உண்டால் உண்ண உணத்தெவிட் டாதே. இக்கவிதையை அவரே நிறுத்தி நிறுத்தி எங்களுக்குப் படித்துக் காட்டினர்; எங்களையும் படிக்கச் சொன்னர். குழந்தைகளாகிய எங்கள் உள்ளத்தைக் கவிதையால் நிறைவு செய்த நிறைகவி பாவேந்தர் பாரதிதாசன். o "பாரதிதாசன் பிக்சர்ஸில் பங்குதாரராக இருந்த ஆசிரியர் பாலு இவர்மீது ஒரு வழக்குத் தொடர்ந்திருந் தார். வழக்கு புதுவை நீதிமன்றத்தில் நடை பெற்றுக் கொண்டிருந்தது. ஒரு நாள் அவசரமாக நீதிமன்றத்துக் குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். குழந்தைகளாகிய ாங்களும் அவருடன் காரில் வர அனுமதி கேட்டோம். *சரி! காரில் ஏறிக் கொள்ளுங்கள்; என்ருர், நாங்களும் ஏறிக் கொண்டோம். என்னுடைய கைவிரல் கார்க் கதவின் இடையில் இருப் பதைக் கவனிக்காமல், கவிஞர் கதவைச் சாத்திவிட்டார். என் கைவிரல் கதவிடுக்கில் சிக்கிக் கொண்டது. விரல் நசுங்கி இரத்தம் கொட்டத் தொடங்கியது. அதைக் கண்டதும் கவிஞரின் உள்ளம் பதறியது. "பையனை நாங்கள் மருத்துவமனைக்குக் கூட்டிப் போகிருேம். நீங்