பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127/முருகுசுந்தரம் கெஞ்சி, எவரிடத்திலும் சொல்ல வேண்டாம்; உனக் எது வேண்டுமாஞ்லும் செய்கிறேன்’ என்று " கூறினன். ஊமை சிரித்துக்கொண்டே சென்று விட்டான். அன்று மதியம் மேற்படி பணக்காரனின் மிகப் பெரிய அரிசி மண்டிக்குச் சென்ருன் ஊமை. அங்கே கடை யினுள் அரிசியில் கல்லைச் சில ஆட்கள் கலந்து கொண் டிருந்தனர். அவர்கள் ஊமையைப் பார்த்து விட்டு கடையின் வாசலில் வந்திறங்கிய பணக்காரனுக்குச் சாடை காட்டினர்கள். பணக்காரன் ஊமையைமிரட்ட எண்ணியபோது காலையில் நடந்தது நினைவுக்குவந்தது. ஊமையைஅருகில் அழைத்து 'கல் கலந்த அரிசியை என் வீட்டிற்குப் பயன் படுத்திக் கொள்கிறேன். இனி மேல் அரிசியில் கல் கலக்கமாட்டேன்’ என்று கூறிஞன். ஊமை சுட்டு விரலைக்காட்டி,அசைத்து விட்டுச்சென்ருன், அவமானத்துக்கு அஞ்சிய பணக்காரனைக் கொண்டு அந்த ஊமை ஊரார்க்குப் பல நன்மைகள் செய்து விடுகிருன். இந்தக்கதையைத் தாத்தா ஒருநாள் சொல்ல வில்லை; பல நாளில் பல்வேறு நிகழ்ச்சிகளாகச் சொல்லி யிருக்கிருர். எனக்கு நினைவு தெரிந்தபிறகு "அமைதி” கதைத் தலைவன் 'மண்ணுங்கட்டியையும் இந்த ஊமை யனையும் நினைவு படுத்திக் கொள்வேன். - 그 இளைஞர் இலக்கியப் பாடல்கள் முதலில் எங்களுக்காக எழுதப்பட்டன. தாத்தா இனிமையாகப் பாடல்களைப் பாடுவதுண்டு. ஆளுல் எங்கள் அம்மாயிதான் என் வென்று எடுத்துரைப்பேன்; இந்தக் கடைதனில் இருக் கும் பொருள் வரிசையை' என்று தாத்தாவின் இனிய பொருள் வரிசைப் பாடலை அடிக்கடி பாடிக் காட்டுவார் கள். பின்னர் தம்பி பாண்டியனின் குறும்புச் செயலைக் கண்டித்து அடிக்க மனம் வராத காரணத்தால் தான், இளைஞர் இலக்கியப் பாடல்கள் எழுந்தன. புதிதாக வண்ணம் பூசப்பட்ட கதவிலும் அவன் பயங்கர மான 'ந'னான காக்கையைப்படமாக வரைந்தான். அதைப்பார்த்து விட்ட தாத்தா கடுஞ்சினத்துடன் அவனை அடிக்கக் கையை ஓங்கிய போது, தம்பி மழலை மொழியால் "நான் தான் தாத்தா காக்கா படம் போட் டேன், நல்லா இருக்கா?’ என்ருன்.