பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக்கல்லறையில்|144 ஒருநாள் பாவேந்தருக்குக் கடன்கொடுத்திருந்த ஒருவர் அவரை வந்து பார்த்துப் பேசிவிட்டுச் சென்ருர்,பாவேந் தர் தலையணையில் சாய்ந்த வண்ணம் சிந்தனையோடு படுத்திருந்தார். நான் மெதுாக அவர் அறைக்குள் சென்று எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். பாவேந்தர் என்னைப் பார்த்து, , வாழ்க்கைன்னு இருந்தா கொடுத்து வாங்கல் இருக்கணும். இல்லேன்ன வாழ்க்கை சப்புன்னு இருக்கும். வள்ளுவர்கூட இரப் பாரை இல்லாவின் ஈர்ங்கன் மாஞாலம் மரப்பாவை சென்றுவத்தற்று ன்னு சொல்ருர் என்று சொல்லி விட்டு அவரே சிரித்துக்கொண்டார். அவர் உள்ளத்தின் ஓட்டத்தை என்னுல் புரிந்துகொள்ள முடியவில்லை. என்சூலும் தானும் சிரிப்பது போல் பாசாங்கு செய்தேன்; ஒருநாள் அவரைத் தேடி வந்த நண்பர் ஒருவர் "இன் பத்துள் சிறந்த இன்பம் எது?’ என்று பாவேந்தரைக் கட்டார். "தான் விரும்பும் பெண், வலியவந்து அணைக்கும் சுகம்’ என்ருர் பாவேந்தர். அப்போது பாவேந்தருக்கு வயது எழுபத்தொன்று.