பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155/முருகுகந்தரம் கீழ்க் கண்ட பாட்டைப் பாடினர். "ஒட்டெழுத் தைக்கருத்திற்குறித் திட்டுநித் தம்பரவும் - சிட்டர்கட்குத்திருப் பொற்பதத் தைச்சிறக் கத்தருமவ் வட்டநெட் டைப்பணி மெத்தையத் தற்கிடம் வாரிசப்டொ குட்டின்த்துக்குலுந் தத்திமுத் தீனுங் குறுங்குடியே இதை எள படிப்பான்? இல்ல... மனசுலதா நிக்குமா?’’ என்று கூறி முடித்தார் பாவேந்தர். 辽 சேலம் ஸ்வர்ணும்பிகா பஸ் உரிமையாளரான ரான் சாகிப் ரத்தனசாமிபிள்ளை நீதிக்கட்சியில் குறிப்பிடத் தக்கவர். பெரியாரின் நண்பர், சேலம் மாவட்ட அரசி யலில் முக்கியப்பங்கு வகித்தவர். மாவட்டக்கழக உறுப் பினராகவும், சென்னைச் சட்டமன்ற உறுப்பினராகவும் பணிபுரிந்தவர். சேலம் நகராட்சிக் கழகத் தலைவராக இருந்து சேலத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட வர். இவர் கர்லத்தில் சேலம் நகராட்சிக்கல்லூரி சிறந்த மூன்னேற்றம் பெற்றது. இவர் நகரவைத் தலைவராக இருந்த காலத்தில் கல்லூரி முதல்வராகத் திருவாளர் இராம்சாமிக்கவுண்டரும், பேராசிரியர்களாகத் தேவ நேயப்பாவாணர், தி. வை. சொக்கப்பா ஆகியோர்களும் பணி புரிந்தனர். இவர்கள் தமிழ்ப் புலமையும், தன் மான இயக்க உணர்வும் கொண்டவர்கள்.

  • பி. ஆர். பி' என்று சேலம்மக்களால் மதிப்போடுஅழைக் கப் பட்டு வந்த திரு.பி, இரத்தன சாமிபிள்ளை 5 ! அடி உயரமும், அதற்கேற்ற கமபீரமான தோற்றமும் கொண்டவர்; மிகவும் செல்வாக்தோடு வாழ்ந்தவர். அவருக்கு உரிமையானபெரிய தோட்டமும், அதன் நடு வில் ரத்னு படப்பிடிப்பு நிலையமும் (Rathna Studio) சேலத்துக்கு மேற்கே மூன்றுகல் தொலைவில் மாமாங் கம்' என்ற இடத்தில் உள்ளன. மிகவும் இயற்கையழகு