பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்|30 டிருந்தேன். திருவாளர்கள் முருகு சுங்பிரமணியம், பெரியண்ணன் ஆகியோரும் வேறு சில இளைஞர்களும், என்னிடத்திலும், எனது கொள்கையிடத்தும் ஈடுபாடும் ஆர்வமும் காட்டி எனக்கு மிகவும் ஆதரவாக விளங்: கினர். கோளுப்பட்டில் பார்ப்பன்ர் அல்லாதார் இயக் கம் தொடங்கி வைக்கப்பட்டது. இயக்கத்தின் சார்பாகப் பேசுவதற்கு அறிஞர் அண்ணுவை அழைப்பதென்று முடிவு செய்யப்பட்டது. அண்ணுவுக்கு முடங்கல் விடுத்தோம்; பணமும் அனுப் வினுேம். அவரிடமிருந்து மறுமடல் ஏதுமில்லை. நானே நேரில் சென்று அண்ணுவை அழைத்துவர முடிவு செய்து சென்னைசென்றேன். அண்ணு சென்னை யில் இல்லை. நேரே காஞ்சி சென்றேன். அண்ணு காஞ்சியில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார் நாடக மேடைக்கே நான் சென்றேன். அண்ணு. இராவணன் வேடத்தில் இருந்தார். மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுத்து, வழிச் செலவுக் குப் பணமும் கொடுத்து விட்டுக் கோனுப்பட்டு திரும்பினேன். அண்ணு இம்முறையும் வரவில்லை. மறுமுறை நான் சென்னையில் அண்ணுவைச் சந்தித்த போது, கூட்டத்துக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற். பட்டதை எடுத்துச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இதற்குள் செட்டிநாட்டு இளைஞர் சிலர் பாரதிதாசனைக் கூட்டத்துக்கு அழைத்திருந்தனர். அவர் கோனுப்பட்டில் பெரியண்ணின் வீட்டில் தங்கியிருந்தார். நான் நேரில் சென்று கூட்டத்துக்கு அழைத்ததும் ஒத்துக் கொண்டார். பாரதிதாசன் கோளுப்பட்டு வருவதற்குச் சில நாட் களுக்கு முன், திருவாளர் சோமசுந்தரம் செட்டியார் என்பவர் அங்கு இலக்கியச் சொற்பொழிவாற்றினர். அவர் பழுத்த சைவர். பெரிய புராணத்திலும், திருநாவுக்கரசர் தேவாரத்திலும் அதிக ஈடுபாடுடை யவர்.இவரைப்பற்றிப் பாரதிதாசனிடத்தில் கூறினுேம். பாரதிதாசன் கோனுப்பட்டுக் கூட்டத்தில் பேசும் போது சைவத்தைக் கடுமையாகக் கிண்டல் செய்தார். சிறுத்