பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 முருகுசுந்தரம் அழகோடும் கலந்து பாடியிருக்கிருன் நீங்களும் அவ் வாறு பாடியிருக்கிறீர். மற்ற கவிஞர்கள் சொல்லழகு தனித்தனிச் சொல்லில் இருக்கும்படி பாடுவது வழக்கம். ஆளுல் கம்பன் சந்தத்தையும் சொல்லையும் இணைத்து எத்தனை எத்தனை தந்திரம் காட்ட முடியுமே அத்த யும் தன் பாடல்களில் காட்டியிருக்கிருன், தெரிந்தோ தெரியாமலோ கம்பனின் ந்த உத்தியை உங்கள் பாடல்களில் கையாண்டிருக்கிறீர்கள்’’ என்று நான்

  • எப்படி?’ என்ருர் பாரதிதாசன். அவருடைய காதல் நினைவுகன்’ என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள ஒரே குறை என்ற பாடலை எடுத்துச் சொன்னேன். ‘அன்பிருக்கும்’ என்று தொடங் கும் பாடல்அது. இருக்கும் இருக்கும்!’ என்று முடியும் அந்தச்சந்த உத்தி கம்பன் பாட்டிலும் காணப்படுகிறது என்பதைக்கூறி, அக் கம்பராமாயணப்பாடலையும்.சொன் னேன். பாரதிதாசன் ஒத்துக் கொண்டார். இனி எழுத விருக்கும் நூல்களைத் தனித் தமிழிலேயே எழுதப் போவ தாகவும் கூறினர்.

சென்னையில் எங்கள் வீட்டில் தங்கியிருந்தபோது, நான் எழுதிய 'தமிழ் வாழ்க! என்ற நூலைக் கையில் வைத்துப் புரட்டிக் கொண்டிருந்தார் பாரதிதாசன். பிறகு அதைக் காட்டி நீங்கள் பேசியதா?’ என்று கேட்டார். 'நீங்கள் செட்டிநாடு வருவதற்குக் கொஞ்ச நாட் களுக்கு முன் கோளுப்பட்டில் பத்து நாட்கள் தமிழ் விழா நடத்தினேன். அந்த விழாவில் நான் பேசியவற்றையும், பேச நினைத்தவற்றையும் தொகுத்துத் தமிழ் வாழ்க’ என்ற பெயரில் இந்நூலை எழுதினேன். தமிழ் வாழ்க!” என்பது ஒரு மந்திரம். தமிழ் இயல் வாழ்க, தமிழ் இசை வாழ்க: தமிழ் நாடகம் வாழ்க, தமிழ் மருத்துவம் வாழ்க: தமிழ் வாணிகவியல் வாழ்க-என்று ஒவ்வொரு துறையிலும் தமிழ் மொழி மற்ற மொழிகளைவிட எவ் வாறு மேம்பட்டு விளங்குகின்றது என்பதை மையமாக வைத்து ஆய்வு செய்து இந்நூலை எழுதியுள்ளேன். இந்நூல் வெளிவந்ததும் திருவாளர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவள்கள் ஐம்பது படிகள்