பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முேருகுசுந்தரம் உடனே நான் பொடி வாங்கி வந்தேன். சில தினங் களில் பொடி மேல் சட்டை மேல் விளையாடத் தொடங் கியது. இது மிக மிக மோசம், பொடி சட்டை. யெல்லாம் ஆகிவிடுகிறது' என்றேன். உடனே பொடி மட்டையைத் துக்கி எறிந்தார். நான் ஒடி ஒரு காப்பி கொண்டுவந்தேன். பேசாமல் குடித்தார். யாருமே பேசவில்லை. என் மனதில் ஒரு திகில். அடுத்து சில தினங்கள் சென்றன. சுப்ரமண்யா! சுருட்டுப் பிடித்தால் வேண்ட்ாம்; பீடி பிடித்தால் வேண்டாம்; பொடி போட்டால் வேண்டாம். இப்போ என்னப்பா பண்றது?’ என்ருர் பாவேந்தர். உடனே சிவா அவர்கள் சிகரெட்" என்று சொல்லிச் சிரித்தார். இதாப்பா அவர் தான் சொல்லிட்டாரே!” என்று குலுங்கக் குலுங்கச் சிரித்தார். நான் ஓடிப்போய் சிகரெட் வாங்கி வந்தேன். "கொஞ்சமாத்தான் பிடிப்பேன்’ என்று சிவா நாயக்கரைப் பார்த்துக் கண்சிமிட்டினர் பாவேந்தர். - சுருட்டு வேண்டாம் என்று சொன்னதும் விட்டதுபீடி, பொடியை விட்டது-என்னுல் மறக்கவே முடிய வில்லை. இந்தப் பழக்கங்களை நினைத்தவுடனே நிறுத் துவது யாருக்கும் எளிதான காரியம் அல்ல. பாவேந் தரின் மனத்திட்பமே நினைத்ததும் பழக்கத்தை விட முடிகிறது. 口 1936-ஆம் ஆண்டு. கவிதா மண்டலம் காரியாலயத்தில் ஒரு நாள் பச்சையப்ப உடையார், குயில் சிவா நாயக்கர், தம்புசாமி முதலியார், பேராசிரியர் பஞ்சாபி கேசய்யர் முதலியோர் அமர்ந்திருந்தனர். பஞ்சாபி கேசய்யர் 'தெலுங்கு சமஸ்கிருதம் போன்று தமிழில் கீர்த்தனேகள் பாடமுடியாது. அப்படி ஏதோ பாடினுலும் அவை தாளத்திற்கும் சங்கதி போட்டுப் பாடுவதற்கும் ஒத்து வராது’ என்ருர், "அது என்னும்பா அப்படிச் சொல்ருன். தமிழில் ஏன் முடியாது? எவ்வளவு கடினமான தாளத்திலும் தமிழில் பாடமுடியும். லாவணியைச் சவுக்க தாளத்தில் பாடுவது கடினம்; பாட்டிலிருக்கிறது. இதோ.பார்’ என்று