பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்/64 "பூரீமதி இவளார்’ என்ற அவரது லாவணியைப் ங்ாடிக் காட்டினர். "உடையாரே தாளம் போடு’ என்ருர். அப்போது அவர் வாடியது தாளத்தில் எத்தகைய அபார ஞானம் அவருக்கு இருந்தது என்பது வெளியாயிற்று. தியாகராசர் கீர்த்தனேபோல் தமிழில் பாடமுடியாது என்று மறுபடியும் வற்புறுத்தினர் பேராசிரியர் பேச்சு ஒருவாறு முடிந்து 12-மணிக்கு எல்லோரும் எழுந்தனர். கவிஞர் மட்டும் உட்கார்ந்திருந்தார். திடீரென்று "சுப்ரமண்யா அவன் என்ன சொன்னன்? தியாகராசர் கீர்த்தனே போல் தமிழில் பாடமுடியாது. அது என்ன தியாகராசர் கீர்த்தனே? இங்கு ஏதாவது இருக்கா?” ன்ன்று கேட்டார். అతేన్డ్రి என்று சுதேசமித்திரன் வாரப் வத்திரிகை ல் மொழிபெயர்ப்பும் இசையமைப்பும் என்ற தலைப்பில் வெளியாகியிருந்த பத்துத் தியாகய்யரின் கீர்த்தனைகளைக் கொடுத்தேன். சாப்பிட்டுவிட்டு வந்தவுடன் கவிஞர் எழுதினர். "நிஜமர்ம முலயனு' என்ற தியாகய்யர் கீர்த்தனையின் மொழிபெயர்ப்பு தியாகராசருடைய முத்திரையுடன் எழுதினர். உடைய ஈரே பாடு!" என்ருர்; அவருடன் சேர்ந்தும் பாடினர். அவன் என்னமோ சொன்னனே "சங்கதி, அதெல்லாம் போட்டுப் பாடு என்ருர். அவரும் பாடி விட்டு, இந்தப் பாட்டு அற்புதம்! அற்புதம்! என்ருர். பத்துக்கீர்ததனை களை மொழிபெயர்த்துக் கவிதாமண்டலத்தில் வெளி விட்டோம். so பாரதியைப் பற்றிப் பாவேந்தர் பேசத் தொடங்கிளுல், உண்மை இதயத்தின் ஆழத்திலிருந்து பீறிட்டுக் கொண்டுவரும். மேடையேறிப் பேசும் போது யாருக் கும், எதற்கும் அஞ்சாமல் உண்மையை அப்படியே பேச வேண்டும் என்பது அவர் கொள்கை. அக்கொள் கையை அவர் அப்படியேகடைப்பிடித்ததோடு,எனக்கும் அதே கொள்கையை ஆலோசனையாகவும், எச்சரிக்கை யாக்வும் வழங்கினர்.