பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 முருகுசுத்தரம் சில மாதங்கள் கழித்து ஒரு தான் 'சுப்ரமணியம்! நீ சொன்னது சரி. அந்தப் படக்கம்பெனியிலிருந்து பாட் டுக்காக அவன் ரூ.500 = தான் வாங்கியிருக்கான். நம்ம கிட்ட ஐம்பதுதான் கொடுத்தான்' என்ருர் பாவேந்தர், D. 1935-ஆம் ஆண்டில் ஒருநாள் திடீரென்று எழுத வேண்டும்’ என்ருர் பாவேந்தர். காகிதம் எழுதுகோல் கொண்டுபோய் வைத்தேன். எழுதிக்கொண்டே | தார்; மதியம் உணவுக்குக்கூட எழுந்திருக்கவில்லை. சுமார் மூன்று மணிக்கு முடித்தார். ஓர் அழகான சிறு கதை உருவாகியிருந்தது. "இதை ஆனந்த விகடனுக்கு அனுப்பு” என்ருர், அனுப்பி வைத்தேன். 'அவன் அதை ஏதாவது போட்டான?' என்று வாரா வாசம் விசாரிப்பார் இரண்டுவாரங்கள் கழிந்தன. *அவன் அதைப்போடவில்லேயென்ருல் திருப்பி அனுப்பி விடச்சொல்லி எழுது’’ என்ருள்; அப்படியே எழுதினேன். மீண்டும் ஒரு நினைவூட்டுக் கடிதமும் எழுதினேன். ஆ ன் ந் த வி. க - னி ட மி ரு ந் து பதில்ன்துமில்லை. அக்கதையை வெளியிடவுமில்லை. அதை நினைக்கும் போதெல்லாம் பாவேந்தருக்குக் கோபம் வரும். ஏன் இப்படிச் செய்யருனுங்க! பாரதியார் எழுத்தை இப்படித் தான் பாழடித்தானுங்க!” என்பார் அவர். ஒரு வருடத்துக்குப் பின்னுல் ஒரு நாள் காரசாரமாக ஆனந்த விகடனுக்கு ஒரு கடிதம் எழுதி, அவரே கைப் பட முகவரியும் எழுதி என்னிடம் கொடுத்து இதை அனுப்பு’ என்ருர் அனுப்பி வைத்தேன். ஒன்றிற்கும் பதில் இல்லை. பல வருடங்களுக்குப்பின்னல் கூட அதே தின்ேவுதான். அது அழகுணர்ச்சியோடு எழுதப்பட்ட காதல் கதை, ரோமியோ ஜூலியட் கதை போன்றது. காதலி புதைக்கப்பட்டதற்குப் பின்னல் காதலன் சமாதிக்கு வந்து கதறுவதும். தோண்டிப்பார்ப்பதும் அதன்பின் அந்த அழுகல் சதைக்கா, சீதுக்கா ஆசை வைத்திருந்தேன் என்று விரக்தியடைவதும் வோன்ற கருத்துக்கொண்ட கதை. அற்புதமான வசனங்கள்.