பக்கம்:புது டயரி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4

கண்ணாக முன்பு வந்ததை இப்போது நினைத்துச் சிரிக்க வேண்டும்;பிறகு இடுக்கண் வரும் போது சிரிக்கும் ஆற்றல் உண்டாகும்.

வாழ்க்கை அநுபவங்களில் மென்மையான நகைச்சுவையை உண்டாக்குபவற்றைப் பற்றி எழுதினால் நாம் புன்னகை பூப்பது போல மற்றவர்களும் நகைச்சுவையை நுகர்வார்கள். ஏனென்றால் அத்தகைய அநுபவங்கள் அவர்களுடைய வாழ்க்கையிலும் ஏற்பட்டிருக்கும்.

இத்தகைய அநுபவங்களை நிலைக்களமாக வைத்து மென்மையான நகைச்சுவை யமைய எழுதிய கட்டுரைகள் இவை. இவை பத்திரிகையில் வெளிவந்த போது, “என்னுடைய அநுபவங்கள் உமக்கு எப்படி ஐயா தெரிந்தன?” என்று கேட்ட அன்பர்களும் உண்டு.

இந்தக் கட்டுரைகளில் பல இடங்களில் என்னுடைய ஆசிரியப் பிரானைப் பற்றிய செய்திகள் வரும். அவர்களோடு பழகிய ஆண்டுகள் என் வாழ்க்கையில் அநுபவ முதிர்ச்சியைத் தந்த காலமாதலின், என் அநுபவத்தினிடையே அவர்களுடைய நினைவு இயல்பாகவே எழுகிறது.

இவற்றைப் புத்தக உருவில் தொகுத்து வெளியிடத் திருவருள் கூட்டுவித்தது. அந்தத் திருவருளை வாழ்த்துகிறேன்.

காந்தமலை

கி. வா. ஜகந்நாதன்

சென்னை.28

6–8–79
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/5&oldid=1534728" இலிருந்து மீள்விக்கப்பட்டது