பக்கம்:புது வெளிச்சம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விட்டுணு, சிவன், சூரியன், அம்பிகை, கணநாதன் என்று ஏற்கனவே கன்னடநூல் விவரித்துள்ளதனைக் முந்திய கட்டுரைப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை இன்னின்னது என்று குறிப்பிட வேண்டியது இங்கு அவசியமாகிறது.

'பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம்' என்பனவே அவை. இவ்வைந்து அஃறிணைப் பெயர்களையும் வெகுநுட்பமாகிப் பொருந்த வுன்னித்தான் அவர் உயர்தினைப் பெயர்களைச்சுட்டி நமக்கு இலவசமாகத் தந்தருளினார்.

முதலில் பிருதிவி, அப்பு எனும் வரிசைக் கிரமத்தை மாற்றி வைத்தார். விஷ்ணு எனின் தமிழில் கடல் மேகம், நீர்; ஆரிய மொழியில் அப்பு எனப்படும். அடுத்து சிவன் என வைத்தார்; சிவனுக்கு இன்னொரு பெயர் பசுபதி என்றும் வழங்கப்படும். பசுபதி எனின் அதன்பொருள் வாயு எனப்படுகிறது. இந்த வாயுதான் நமது பிராணன், அல்லது உயிர். நமது உடலிலுள்ள உயிருக்குப் பதி, அதாவது ஆதாரமாயுள்ளது. வானத்திலிருந்து இரண்டாவதாகத் தோன்றிய இரண்டுகுணம் உள்ளது காற்று, வானத்துக்கு ஒரு குணம் மட்டும் உண்டு. அது ஒலி மட்டும்தான், வாயுவுக்கு இரண்டு குணம் உண்டு அவை ஒலியும் தொடுமுணர்வு தருவதுமாகும்.

மூன்றாவதாகச் சூரியனை வைத்தார். வெப்பத்துக்கு, நெருப்புக்குக் காரணமாகவுள்ளது. ஆரிய மொழியில் நெருப்பு தேயு எனப்படும். நெருப்பின் குணம் மூன்று. அஃதாவன ஒலி, பரிசம், தென்படல் எனப்படும்.

நான்காவதாக அம்பிகை என்ற பெண்பால் பெயர் உள்ளது. அம்புவி, புவி என பூமிக்கு இட்ட பெயர்தான் அம்பிகை எல்லா சீவராசிகளையும் தோற்றுவிக்கக்கூடிய, தாய் போன்ற இயல்புள்ளது இந்தப் புவி. இது ஐந்து குணமுள்ளது. அவை ஒலி, பரிசம், தோற்றம், நாற்றம், சுவை எனும் பெயர் பெறும் என்பர். விடுபட்ட நீருக்கு நான்குணம் உள்ளதுவாம். அவை ஒலி, பரிசம், தோற்றம், சுவை எனப்படும்.

அபரப் பிரம்மம் அல்லது அச்சரப்பொருள் எனப்படும் பஞ்சபூதங்களைந்தும் அழியாதது, என்றுமிருப்பவை.

புதுவெளிச்சம்

89