பக்கம்:புது வெளிச்சம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இதை நிரூபிக்கும் விதத்தில் பண்டைக்காலத்தில் கட்டிய கதை ஒன்றை இங்கு குறிப்பிடுகின்றேன். இது கந்தப் புராணம் பழைய பதிப்பிலிருந்து நான் படித்த கதை. இதை ஏற்கனவே நான் பல சந்தர்ப்பங்களில் பலரிடம் வாய்மொழியாகச் சொல்லியுள்ளேன். ஒரு சிறிய ஊர் அது. ஒரு நாள் ஒரு மாலைப் பொழுது ஒரு பெரிய வீட்டில் முதியவரொருவர் தன் அந்திம கால அவதியில் ஒரு கட்டிலிலில் பிரான அவஸ்தையோடு படுத்திருக்கிறார்.

மகன்களில் ஒருவன், அந்த தந்தையின் அருகில் அமர்ந்துதுக்கம் கலந்த குரலில் 'அப்பா'! என அழைக்கிறான். கிழவன் கண் திறந்து தன் மகன் முகத்தை உற்றுப் பார்க்கிறான், ஒரு கேள்விக் குறியாக.

மகன் கேட்டான் : “அப்பா, இந்நாள் வரையும், இன்றும் இந்த வீடு பஞ்சம் பட்டினியின்றி வசதியாக எங்களை வாழவைத்தது. இதிலுள்ள அனைத்துச் செல்வமும் உங்கள் ஒருவராலேயே தேடப்பட்டது என்று அம்மா பலதடவை சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒருநாளும் நாங்கள் உழைக்கச்சென்றவர்களல்ல. எந்தத் தொழிலும் கற்றுக்கொள்ளவும் இல்லை. எனவே உங்கள் காலத்திற்கு பிறகு நாங்கள் என்ன செய்வது? எப்படி வாழ்வது? என்பது பற்றி எங்களுக்கு நல்லறிவு கூறுங்கள்” என்றான்.

அப்பாக்கிழவன், சற்று சிந்தித்தவாறு இருந்து பிறகு மெல்லச் சொன்னான்: ‘ஆக்கரா பிரகரா சங்கரா' என்று மூன்று சொற்களின் படியேதான் நான் செல்வம் சேர்த்தேன். நீங்களும் இப்படியே செய்து செல்வந்தர்களாகி வாழுங்கள் என்று கூறிக் கடைசி மூச்சும் விட்டு விட்டார்.

அடுத்து சில நிமிடங்களில் இச்செல்வக் கிழவனை எமதர்மன் முன் கொண்டு சென்று துதுவர் நிறுத்தினார்கள். சித்திரகுப்தன் இவனுடைய பாவ புண்ணியங்களையெல்லாம் டோட்டல் போட்டுச் சரிபார்த்துச் சொல்லலானான் : 'பாவம் தவிரப் புண்ணியம் என்பது கடுகளவும் இன்றி வாழ்ந்த முதல் மனிதன் இவன் ஒருவன்தான். இதற்கு முன் உலகில் பிறந்து வாழ்ந்து இறந்தவர்களில் இவன் செய்த அளவு பாவம் வேறொருவனும் இன்றுகாறும் செய்யவில்லை என்று. இதைக் கேட்டு எமனே திடுக்கிட்டு விட்டான்.

94 <

கவிஞர் வெள்ளியங்காட்டான்