பக்கம்:புது வெளிச்சம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20




அபரோச்சம்


'பரோச்சம்' எனும் சொல்லின் பொருள் காணப்படாதது எனின் அபரோச்சம் எனின், காணப்படும் பொருள் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

‘எதனால் கேள்விக்கு எட்டாதது கேட்கப்பட்டதாயும், நினைவுக்கு எட்டாதது நினைக்கப்பட்டதாயும், அறிவுக் கெட்டாதது அறியப் பட்டதாயும் ஆகுமோ அதுவே பிரம்மம்!' என்கிறது, உபநிசத்து.

தெய்வத்தைப் பற்றி அறிந்து கொள்ள எனை நாடி வந்த யதார்த்த குணமுடைய நண்பனே, (சா காஷ்டா சா பரா கதிச, எது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் அப்பாற்பட்டதோ, (அன்யத்ர தர்மாத்) எதைவிட உயர்ந்தது வேறொன்று மில்லையோ அதுவே இப்பிரம்மம்.

புது வெளிச்சம்

97