பக்கம்:புது வெளிச்சம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தேசநலன் கருதாது வயிற்று பசியை உழைக்காது உண்டு தீர்க்கும் ஒபாராசர்ன், ஜைமினி, வராகமிகிரன் போன்ற அரைகுறை வான சாத்திரக்காரர்கள், இதை சமணர் காலத்தினிலேயே சத்தமும் சோதிடமுமென்றா இவை பிதற்றுப் பித்தரில் பேதையாரில் எனக் கண்டிக்கப்பட்டிருக்கிறது. எங்கேயோ வானத்தில் இருக்கும் ஒரு கிரகம் ஒரு மனிதன் மீது ஆட்சி செய்கிறது என்பதறிவீனம் என்று சேக்ஸ்பியர் ஜோதிடத்தைக் கண்டித்திருப்பதாகவும் கேள்விப்படுகிறேன்.

இறுதியாக நான் சொல்வதிது “சதாப் ஹி சர்தேக பதேசு வஸ்துசு பிரமான மந்தஃகரண பிரவிர்த்தியே" - சத்தியசீலனுக்குச் சமுசயமுண்டானால் அவனுடைய உள்ளம் சொல்லுவதே அறம் என்கிறபடி ஜோதிடம் சுதந்திர மக்களின் அறிவுக்கு மாட்டப்பட்ட விலங்கு எனச் சொல்லி முடிக்கிறேன்.



எங்கு சுதந்திரம் இருக்கிறதோ அங்கு தர்மம் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், சுதந்திரத்தின் தரம் குறைந்து விடும். காசு தேடும் நூல்களுக்கு மட்டும் ஒரு மொழி இடம் தருமானால், அம்மொழி மாசுபடிந்து விட்டதாகும்.

-வெ

மதம், நம்மை கை விட்டாலும் ஒழுக்கம் நம்மை ஒன்று சேர்த்து வாழவைக்கும்.

- ஸ்ரீ கண்டய்யா

தெளிவில்லாத ஞானம் இருமடங்கு மூர்க்கத்தனமானது.

- சம்பாஜோசி

114 <

கவிஞர் வெள்ளியங்காட்டான்